The Dogs & the Fox – நாய்களும் புத்திசாலி நரியும்

The Dogs & the Fox – நாய்களும் புத்திசாலி நரியும் : ஒரு கிராமத்துல ஒரு நாய் நண்பர்கள் கூட்டம் இருந்துச்சு

அந்த நாய் நண்பர்கள் காட்டுக்கு பக்கத்துல இருக்குற இடத்துல தான் எப்பவும் விளையாடும்

ஒருநாள் அந்த நாய்கள் அங்க விளையாட போனப்ப அங்க ஒரு செத்த சிங்கத்தோட தோல் கிடந்தத பார்த்துச்சுங்க

உடனே எல்லா நாய்களும் அந்த தோல கிழிச்சி விளையாட ஆரம்பிச்சுச்சுங்க

அப்ப அந்த பக்கமா வந்த நரி அத பார்த்து சிரிச்சிச்சு

ஏன் சிரிக்கிறீங்க நரியாரேனு கேட்டுச்சுங்க அந்த நாய்கள்

அதுக்கு அந்த நரி சொல்லுச்சு அந்த சிங்கம் இந்நேரம் உசுரோட இருந்தா கதையே வேற ,அதோட நெகத்தோட கூர்மைய நீங்க புரிச்சிருப்பீங்கனு சொல்லுச்சு

நீதி : கீழே இருக்கும் ஒரு மனிதனை உதைப்பது எளிதானது மற்றும் இழிவானது