The Wolves & the Sheep-ஆடுகளும் ஓநாய் கூட்டமும்

The Wolves & the Sheep-ஆடுகளும் ஓநாய் கூட்டமும் :- ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ஒரு ஆட்டு கூட்டம் இருந்துச்சு

The Wolves & the Sheep - Aesop Stories in Tamil

அந்த ஆடுகள் காட்டுக்கு பக்கத்துல இருக்குற புல் வெளியிலதான் தினமும் மேயும்

அந்த ஆடுகளுக்கு பாதுகாப்பா சில நாய்கள் இருந்துச்சு

அதுங்க எப்பவும் ஆட்டு கூட்டத்துக்கு காட்டு மிருகங்க கிட்ட இருந்து எந்த ஆபத்தும் வராதபடி காவல் காத்துச்சுங்க

அந்த காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்த ஓநாய் கூட்டத்துக்கு அந்த ஆட்டு மந்தைய சாப்பிடணும்னு ரொம்ப ஆசை

ஆனா அந்த வேட்டை நாய்கள் எப்போதும் ஆடுகளுக்கு காவலா இருக்குறதால அதுங்கனால ஒன்னும் பண்ணமுடியால

ஒருநாள் ஆடுகளை சந்திச்ச ஓநாய்களின் தலைவன் நீங்க ஏன் எப்பவும் நாய்களோட மட்டும் நட்பா இருக்கீங்க , எங்க கூடவும் நட்பா இருங்கனு சொல்லுச்சு

உடனே அந்த ஆட்டு கூட்டம் அந்த வேட்டை நாய்கள் தங்களோட நாய் நண்பர்களின் நட்ப முறிச்சுச்சுங்க

அன்னைக்கு ராத்திரியே எல்லா ஆடுகளும் ஓநாய்களுக்கு வீணா பலியாச்சுங்க

நீதி : எதிரிகளுக்காக நண்பர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்