The Lion, the Bear, & the Fox – சிங்கம் கரடி நரி கதை

The Lion, the Bear, & the Fox – சிங்கம் கரடி நரி கதை :- ஒரு காட்டுல ஒரு கழுதை நடந்து போய்கிட்டு இருந்துச்சு

அப்ப அந்த கழுதைய பார்த்த சிங்கம் அத வேட்டையாடி சாப்பிட நினைச்சது

உடனே வேகமா கழுதைய பிடிக்க ஓடி வந்துச்சு ,அப்பத்தான் ஒரு கரடியும் அந்த கழுதைய பிடிக்க ஓடி வந்துச்சு

கழுத கிட்ட வந்ததும் சிங்கமும் கரடியும் சண்ட போட ஆரம்பிச்சுச்சுங்க

கரடி அந்த கழுத எனக்குத்தான் சொந்தம் நாந்தான் அத வேட்டையாடுவேன்னு சொல்லுச்சு

அதுக்கு சிங்கம் அந்த கழுத எனக்குதான்னும் சொல்லுச்சு

உடனே கரடி சொல்லுச்சு நான் தான் அந்த கழுதைய தொரத்திக்கிட்டு வந்தேன்னு சொல்லுச்சு

ஆனா சிங்கம் சொல்லுச்சு அந்த கழுதை நான் இருக்குற இடத்துக்கு வந்திருக்கு அதனால அந்த கழுதைய நான்தான் வேட்டையாடி சாப்பிடுவேன்னு சொல்லுச்சு

அந்த நேரம் அங்க வந்த நரி பொறுமையா அந்த கழுதைய அடிச்சி இழுத்துகிட்டு போச்சு

சண்ட போட்டுக்கிட்டே இருந்த சிங்கமும் கரடியும் தங்களுக்கு கிடைச்ச இரையை விட்டுட்டு பசியோட போனாங்க

நீதி : சுற்றத்தாருடன் நட்பு தேவை

நீதி : ஊர் ரெண்டு பட்டாள் கூத்தாடிக்கு கொண்டாட்டம்