The Man & the Lion-சிங்கமும் மனிதனும்

The Man & the Lion-சிங்கமும் மனிதனும்:- ஒரு காட்டு வழி பாதையில ஒரு சிங்கமும் மனிதனும் பயணம் போய்கிட்டு இருந்தாங்க

அப்ப ரெண்டுபேருக்கும் சண்டை வந்துச்சு ,இந்த உலகத்துலயே யாரு சிறந்தவங்கனு அந்த போட்டி இருந்துச்சு

ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்ட போட்டுக்கிட்டே வந்தாங்க

அப்படியே நடந்து போகுறப்ப காடு முடிஞ்சி நகரம் ஆரம்பமாச்சு

அங்க ஹெர்குலஸ் சிங்கத்த அடக்கி அதோட வாய கிழிக்கிற மாதிரி சிலை இருந்துச்சு

உடனே மனிதன் சொன்னான் பார்த்திங்களா அந்த சிலைய,இப்ப புரியுதா மனிதன்தான் ரொம்ப பலம் வாய்ந்தவன்னு சொன்னான்

அத கேட்ட சிங்கம் சிரிச்சிச்சு ,அது மனிதன் செஞ்ச செல ,இதுவே சிங்கம் அந்த செலய செஞ்சிருந்தா வேற மாதிரி இருக்கும்னு சொல்லுச்சு

நீதி : உங்கள் கருத்து உங்களோடு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்