The Dog, the Cock, & the Fox – வேட்டை நாயும் நரியும் சேவலும்

The Dog, the Cock, & the Fox – வேட்டை நாயும் நரியும் சேவலும் :- ஒரு கிராமத்துல ஒரு வேட்டைநாயும் சேவலும் நண்பர்களா இருந்தாங்க.

அவங்க ஒருநாள் உலகத்த சுத்திப்பாக்க நினைச்சாங்க ,அதனால எல்லா நாடுகளுக்கும் நடந்தே போகணும்னு முடிவு செஞ்சாங்க

பக்கத்து ஊருக்கு போக காட்டு வழியா நடந்து போறப்ப ரொம்ப இருட்டிடுச்சு

அதனால அன்னைக்கு ராத்திரி அங்கேயே தங்க முடிவு பண்ணுனாங்க

தூங்கும்போது காட்டு விலங்குகள் கிட்ட இருந்து தங்களை பாதுகாத்திக்கிட ஒரு நல்ல இடத்த தேடுனாங்க அவுங்க ரெண்டுபேரும்.

அப்பத்தான் ஒரு பெரிய மரம் அவுங்க கண்ணுல பட்டுச்சு அந்த மரத்தில இருக்குற கிளை சேவலுக்கு பாதுகாப்பாவும் ,அதே நேரத்துல நாய்க்கு பாதுகாப்பா மரத்துக்கு பின்னாடி ஒரு பொந்தும் இருந்துச்சு

உடனே நாய் அந்த பொந்துக்குள்ளயும்,சேவல் மரத்து மேலயும் பாதுகாப்பா இருந்தாங்க

காலையில விடிஞ்சதும் தூக்கத்துல இருந்து எழுந்திரிச்ச சேவல் ,தான் கிராமத்துல இருக்குரதா நினைச்சுகிட்டு கொக்கரக்கோனு கூவுச்சு.

அத கேட்ட நரி ஒன்னு இன்னைக்கு நல்ல இறை மாட்டுச்சுனு அந்த மரத்துக்கு ஓடிவந்துச்சு

மரத்துமேல இருக்குற சேவலை பார்த்ததும் ,சேவலாரே சேவலாரே எங்கள் காட்டுக்கு உங்களை வரவேற்கிறேன்னு சொல்லுச்சு .

உங்கள் வரவு நல்வரவாக இருக்கட்டும்னு அந்த சேவலை வரவேத்துச்சு ,தொடர்ந்து சொல்லுச்சு கீழ இறங்கி வாங்க நாம நண்பர்களா இருக்கலாம்னும் சொல்லுச்சு

அத கேட்ட சேவல் உஷாராகிடுச்சு ,முகஸ்துதி செய்யுற நரிக்கு தக்க பாடம் சொல்லணும்னு நினச்சுச்சு

உடனே என்னால கீழ வர முடியாது ,ஆனா நீங்க மேல வர சுலபமான வழி மரத்துக்கு பின்னாடி இருக்குனு சொல்லுச்சு

உடனே பின்னாடி வழியா மேல போகலாம்னு ஆசையோட நரி மரத்துக்கு பின்னாடி போச்சு

அந்த பேச்ச எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு இருந்துச்சு வேட்டை நாய்,அடடா இந்த நரி நம்ம சேவல் நண்பரை திங்கபோகுதுனு பயந்துச்சு ,கடைசியா சேவல் நரிய பின்னாடி வரச்சொன்னதும் நாய்க்கு புரிஞ்சி போச்சு ,தான் பின்னாடி இருக்குறத நரிக்கு சொல்லாம பின்னாடி வழி இருக்கிறதா சொல்லி நரிய தன்கிட்ட இந்த புத்திசாலி சேவல் அனுப்புது ,சரியா நரி கிட்ட வந்ததும் அத அடிக்க காத்துகிட்டு இருந்துச்சு வேட்டை நாய்

சரியா நரி வந்ததும் ஒரே அடி அடிச்சி நரியை அங்க இருந்து தொரத்திடுச்சு

புத்திசாலியா இருந்தா தங்களுக்கு வர்ற எல்லா ஆபத்துகளையும் தவிர்க்கலாம்னு தெரிஞ்சி வச்சிருந்த சேவலும் ,வேட்டைநாயும்

ஒன்னுக்கு ஒன்னு துணையா எல்லா ஊர்களையும் சுத்தி பார்த்து சந்தோசப்பட்டுச்சுங்க

நீதி :- முகஸ்துதி செய்பவர்களை நம்ப கூடாது