What is in the Mind? – மனதில் நினைத்தது என்ன – Akbar Birbal Story

What is in the Mind? – மனதில் நினைத்தது என்ன – Akbar Birbal Story:-அக்பர் ஒருநாள் வித்தியாசமான போட்டி ஒன்னு வச்சாரு ,ஒரு மனுஷனோட மனசுல என்ன இருக்குனு கண்டுபிடிக்கிறவங்களுக்கு பரிசுங்கிறது தான் அந்த போட்டி ,அப்படி போட்டியில ஜெயிக்கிறவங்களுக்கு அரண்மனைல மந்திரி பதவி கிடைக்கும்னும் அறிவிச்சாரு

இத அறிவிப்ப கேள்விப்பட்ட அமைச்சர்கள் எல்லாரும் தங்களோட பதவி போயிடும்னு ரொம்ப பயந்தாங்க

பல ஜோசிய காரங்களும் ,பெரியவர்களும் அரண்மனைக்கு தினமும் வர ஆரம்பிச்சாங்க

ஆனா அவுங்கள சோதிச்ச மாந்திரிக எல்லாமே தப்புனு சொன்னாங்க ,சரியான விடை சொன்னப்ப கூட அது தப்பு நான் வேற நினச்சேனு சொல்லி எல்லாரையும் தொரத்தி விட்டுட்டாங்க

இத எல்லாம் ஓரமா இருந்து பார்த்துகிட்டு இருந்த பீர்பாலுக்கு புரிஞ்சது ,இந்த மந்திரிங்க தங்களோட மந்திரி பதவிய காப்பாத்திகிட ,எல்லார் சொல்ற பதிலையும் தப்புனு சொல்லி அனுப்புறாங்கனு புரிஞ்சிக்கிட்டாரு

உடனே தன்னோட வீட்டுக்கு வந்த பீர்பால் மாறுவேஷம் போட்டுட்டு அரண்மனைக்கு திரும்ப வந்தாரு

அப்ப அரசர் கேட்டாரு உங்களால ஒரு மனுஷன் நினைக்கிறத சரியா சொல்ல முடியுமான்னு கேட்டாரு

அதுக்கு மறுவேஷத்துல இருந்த பீர்பால் சொன்னாரு ,அரசே என்னால இந்த அரசவையில இருக்குற எல்லாரும் இப்ப என்ன நினைச்சுகிட்டு இருக்காங்கனு சொல்ல முடியும்னு சொன்னாரு

இத கேட்ட அக்பர் அது எப்படி உன்னால முடியும் ஒவ்வொருத்தரும் ஒன்னொன்னா நினைப்பாங்களேனு கேட்டாரு

Water and Nectar-Akbar Birbal story:

அதுக்கு பீர்பால் இருக்கலாம் ,ஆனா இப்ப இங்க இருக்குற எல்லாரும் ஒரே விஷயத்தை மட்டும்தான் நினைச்சுகிட்டு இருக்காங்கனு சொன்னாரு

அப்படியா அப்ப உங்க திறமையால அவுங்க என்ன நினைக்குறாங்கனு சொல்லுங்க ,நீங்க சரியா சொல்லலைனா உங்களுக்கு சிறைத்தண்டனை தான் கிடைக்கும்னு சொன்னாரு

உடனே மறுவேசத்துள இருந்த பீர்பால் சொன்னாரு ,இங்க இருக்குற மந்திரிங்க எல்லாரும் ,இத உலகத்துலயே அக்பர்தான் நல்லவருனு நினைக்குறாங்க ,அக்பர் ரொம்ப கருணையானவர் ,சிறந்த ராஜா ,அவர்தான் சிறந்த வீரர்னு இப்ப எல்லாரும் நினைச்சுகிட்டு இருக்காங்கனு சொன்னாரு

இந்த பதில கேட்ட எல்லா மந்திரிகளும் திகைச்சு போய்ட்டாங்க ,இப்ப இந்த பதில் தப்புனு சொன்னா அவுங்க அக்பர அப்படி நினைக்கலைனு சொல்ல வேண்டி வரும் ,அப்படி சொன்னா அக்பர் நம்மள தூக்குல போற்றுவாரு அதனால நாங்க அப்படிதான் நினைச்சோம்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க

ஆனா அக்பருக்கு மட்டும் ஒரு விஷயம் புரிஞ்சது வந்திருக்கிறது ஒரு புத்திசாலி ,சூழ்ச்சி செஞ்சு தன்னோட மந்திரி எல்லாரையும் ஒரேமாதிரி தன்னை பத்தி நினைச்சதா நம்ப வச்சு ,அத அவுங்க வாயாலேயே சொல்ல வச்சுட்டாருனு புரிஞ்சது

பரிசு வாங்க அவர கிட்ட வர சொன்ன அக்பர் ,டக்குனு பீர்பாலோட ஒட்டு மீசை ,தாடிய பிச்சி ,வந்திருக்கிறது பீர்பால் தாணு எல்லாருக்கும் காமிச்சாரு