பீர்பலும் கொள்ளைக்காரனும்-Birbal and Akbar Story

பீர்பலும் கொள்ளைக்காரனும்-Birbal and Akbar Story:-அக்பர் எப்போதும் மக்களின் நலனில் அதிகம் அக்கறை கொண்டவராக இருந்தார் ,அதனால் மக்களை பற்றியும் மக்களின் குறைகளை பற்றியும் தெரிந்துகொள்ள மாறுவேடம் பூண்டு நகர்வலம் வருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்

ஒருநாள் அரண்மனையில் கொள்ளைக்காரன் போல் வேடமிட்ட அரசருக்கு ,இன்று வேஷம் கச்சிதமாக இருக்கிறது ,இதனை பயன்படுத்தி பீர்பாலிடம் விளையாட வேண்டும் என்று விரும்பினார்

அதனால் பீர்பாலின் குடிலுக்கு வேசத்துடன் சென்ற அரசர் கத்தியை காட்டி உன்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருளை என்னிடம் கொடு எண்டு மாறுபட்ட குரலில் சொன்னார்

இதனை கேட்ட பீர்பாலுக்கு திகைப்பாக இருந்தாலும் ,இது அரசர்தான் என்பதை தெரிந்து கொண்ட பீர்பால் என்னிடம் இருப்பதில் விலையுயர்ந்தது எனது உள்ளம்தான் அதனைத்தான் அரசராகிய நீங்கள் ஏற்கனவே கொள்ளையடித்து விட்டீரே என்று சொன்னார்

ஓஹ் என்னை கண்டுபிடித்து விட்டீரா என்று சொல்லி சிரித்தார் அரசர்