The Art of Tying a Pagadi – தலைப்பாகை கட்டும் போட்டி -Akbar & Birbal Story

The Art of Tying a Pagadi – தலைப்பாகை கட்டும் போட்டி -Akbar & Birbal Story :-அக்பர் ஒரு நாள் அரசவையில இருக்கிறப்ப பீர்பாலோட தலைப்பாகை கட்டுர விதத்தை ரொம்ப பாராட்டுனாரு

நீங்க ரொம்ப அழகா தலைப்பாகை கட்டி இருக்கீங்கன்னு சொன்னாரு

ஏற்கனவே பீர்பால் மேல பொறாமையில இருந்த ஒரு மந்திரி ,அரசே இதுல என்ன பெருமை எனக்கு கூடத்தான் தலைப்பாகை அழகா கட்ட வரும் நாளைக்கு ஒரு போட்டி வச்சுக்கலாம் யார் நல்லா தலைப்பாகை கட்டிட்டு வராங்கனு பார்ப்போம்னு சொன்னாரு

உடனே அக்பரும் போட்டிக்கு சரினு சொன்னாரு

மறுநாள் அந்த மந்திரி உண்மையாவே பீர்பால விட அழகா தலைப்பாகை கட்டிட்டு வந்திருந்தார்

அத பார்த்த அரசர் ,என்ன பீர்பால் இப்படி தோத்துடீங்கனு கேட்டாரு

அதுக்கு பீர்பால் அரசே நான் தோத்துதான் போய்ட்டேன் ஆனா அந்த மந்திரி கிட்ட இல்ல அவரோட மனைவி கிட்டன்னு சொன்னாரு

அக்பர் புரியாம முழிச்சாரு ,உடனே பீர்பால் சொன்னாரு அரசே இந்த தலைப்பாகை அவரோட மனைவி கட்டி விட்டதுதான் வேணும்னா இப்ப அவுத்துட்டு திரும்ப கட்ட சொல்லுங்கன்னு சொன்னாரு

உடனே அக்பர் அந்த மந்திரிய தலைப்பாகைய அவுத்துட்டு திரும்ப கட்ட சொன்னாரு ,அவரால முடியல ,அவர் தன்னோட மனைவிதான் இந்த தலைப்பாகைய கட்டி விட்டதா சொன்னாரு

அது எப்படி பீர்பால் அவரு மனைவிதான் அந்த தலைப்பாகைய கட்டி விட்டாங்கனு கண்டுபிடிசீங்கனு கேட்டாரு

Water and Nectar-Akbar Birbal story:

அதுக்கு பீர்பால் அந்த மந்திரியோட தலைப்பாகையை வாங்கி உதறுனாரு ,அதுல சேலை கட்ட பயன்படுத்துற ஊசி இருந்துச்சு ,

அக்பர் திரும்ப கேட்டாரு அது எப்படி அந்த ஊசி அதுல இருக்குனு உங்களுக்கு தெரியும்னு கேட்டாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு ,அதுக்கு நீங்க முதல்ல என்ன மண்ணிக்கனும் அப்பதான் எப்படி கண்டுபிச்சேனு சொல்லுவேன்னு சொன்னாரு

அரசரும் உங்கள மன்னிச்சுட்டேன் இப்ப சொல்லுங்க அந்த தலைப்பாகையில சேலை கட்ட பயன்படுற ஊசி இருக்குறது எப்படி கண்டுபிடிசீங்கனு கேட்டாரு

அரசே நானும் இந்த போட்டியில தொல்வி அடைஞ்சவந்தான்னு சொல்லிட்டு ,அவரோட தலைப்பாகைய கழட்டி உதறுனாரு ,அதுலயும் அதே மாதிரி சேலை கட்ட பயன்படுற ஊசி இருந்துச்சு

அத பார்த்த அக்பர் கேட்டாரு ,அப்ப உங்க தலைப்பாகையும் உங்க மனைவிதான் கட்டி விடுவாங்களானு கேட்டாரு

பீர்பால் சிரிச்சிகிட்டே ஆமான்னு சொல்லிட்டு ,அக்பர் காதுக்கிட்ட வந்து அரசே உங்க மனைவியோட சேலை ஊசி பின்னாடி தெரியுதுனு சொன்னாரு

அக்பர் டக்குனு தலைப்பாகைய சரிசெய்ய ஆரம்பிச்சாரு ,அவரு கைய பிடிச்ச பீர்பால் சொன்னாரு ,அப்ப உண்மையாவே மகாராணிதான் உங்களுக்கும் தலைப்பாகை கட்டி விடுவாங்களானு கேட்டாரு

அக்பரும் ஒரு சின்ன பிள்ள மாதிரி பீர்பால பார்த்து சிரிச்சாரு