சுகாதாரமானது எது வின்ஸ்டன் சர்ச்சில் கதை

ஒரு சமயம் இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், இந்திய ஜனாதிபதி டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணனும் ஒரு விருந்துக்குச் சென்றனர்.

மேஜை நாற்காலி போட்டு விருந்து பரிமாறப் பட்டது

இராதாகிருஷ்ணன் கையை நன்றாகக் கழுவி விட்டு சாப்பிடத் தொடங்கினார் அவருக்கு எதிரில்

அமர்ந்திருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஸ்பூனில் உணவை எடுத்து சாப்பிடத் தொடங்கினார் இராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைக் கண்ட வின்ஸ்டன் சர்ச்சில், “என்ன இது கையினால் சாப்பிட்டுக் கொண்டு, ஸ்பூனால் சாப்பிடுங்கள்,

அதுதான் சுகாதாரமானது” என்றார் அதற்கு இராதாகிருஷ்ணன், “இல்லை இல்லை கைதான் மிகவும் சுகாதாரமானது. ஏனென்றால் எனது இந்தக் கையை என்னைத் தவிர வேறு யாரும் சாப்பிடு வதற்கு உபயோகப்படுத்த முடியாதல்லவா என்றா

அதைக் கேட்ட வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு கணம்

அதிர்ந்து போனார்.