ஓநாயை நம்பிய நாய்கள் | Tamil Kids Story Wolf and Dogs

ஒரு கிராமத்துல ஒரு ஆட்டு பண்ணை இருந்துச்சு

அந்த ஆடுகளோட பாதுகாப்புக்கு சில நாய்களும் இருந்துச்சு

ஆடுகளை திங்க வர்ற ஓநாய்களை நாய்கள் தொரத்தி விட்டுடும் ,நாய்களோட விசுவாசத்தால அந்த ஆடுகள ஒன்னும் செய்ய முடியல

ஒரு நாள் எல்லா நாய்களும் ஓய்வு எடுத்துகிட்டு இருந்துச்சு

அப்ப அங்க வந்த ஓநாய்கள் தோழர்களே தோழர்களே ஏன் இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க

நாங்களும் உங்கள மாதிரிதான் எங்களையும் உங்க காவல் வேலைல செத்துகோங்க அப்படின்னு சொல்லுச்சு அந்த ஓநாய்

ஓநாய் மேல பரிதாப பட்ட நாய்கள் அந்த ஓநாய்களை பண்ணைக்குள்ள நம்பி விட்டுச்சுங்க

உள்ள வந்த ஓநாய் கூட்டம் ஒரு ஒரு நாயா கடிச்சு கொன்னுச்சுங்க

எல்லா நாயையும் கொன்னுட்டு எல்லா ஆடுகளையும் சாப்பிட ஆரம்பிச்சதுங்க

யாரை எங்கே வைக்க வேண்டும் ,யாரை நம்ப வேண்டும் என்று தெரிந்து கொண்டு நம்ப வேண்டும்