ஓநாயை வென்ற நாய்

ஒரு கிராமத்துல ஒரு விறகு வெட்டி வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவர் ஒரு நாய் வளத்துகிட்டு வந்தாரு

அந்த நாய் ரொம்ப விசுவாசமா இருந்துச்சு அதனால் அந்த நாய ரொம்ப நம்புனாரு அந்த விறகு வெட்டி

ஒருநாள் தன்னோட குழந்தையை தொட்டில்ல போட்டு தூங்க வச்சுட்டு காட்டுக்கு போனாரு அந்த விறகு வெட்டி

அப்ப ஒரு ஓநாய் வீட்டுக்குள்ள வந்து அந்த குழந்தைய தூக்கிட்டு போக பாத்தது

இத பத்த அந்த நாய் குட்டி வேகமா ஓடி வந்து அந்த ஓநாய கடிச்சு கொன்னு போட்டுச்சு

அதே வீடு முழுசும் ஓநாயோட ரத்தமா இருந்துச்சு

வீட்டுக்கு திரும்புன அந்த விறகுவெட்டி நாயோட வாய் எல்லாம் ரத்தமா இருக்குறத பாத்து

அடடா இந்த நாய் நம்ம குழந்தய சப்டிடுச்சோன்னு நினச்சு அந்த நாய குச்சியால அடிச்சு கொன்னாரு

உள்ள போயி பாத்தப்பாதான் அவருக்கு உண்மையே புரிஞ்சது

நீதி : அவசரம் இழப்பில் முடியும்