Who is Greater- Akbar Birbal Stories – யார் உயர்ந்தவர்

Who is Greater- Akbar Birbal Stories – யார் உயர்ந்தவர் :- அக்பர் ஒருநாள் அரசவையில ஒரு கேள்வி கேட்டாரு

இந்த உலகத்துலயே யார் பெரியவர் சொர்க்கத்துல இருக்குற இந்திரனா ,இல்லை நானான்னு கேட்டாரு

அதுக்கு எல்லாரும் நீங்கதான் அரசேனு சொன்னாங்க

அப்பத்தான் பீர்பால் சொன்னாரு அரசே இந்திரன்தான் உயர்ந்தார்னு சொன்னாரு

இத கேட்ட அக்பருக்கு கோபம் வந்திடுச்சு

உடனே எல்லாரும் பீர்பாலோட முகத்தையே பாத்துக்கிட்டு இருந்தாங்க

பீர்பால் அப்புறமா விளக்கமா சொன்னாரு அரசே இந்த உலகத்தை படைச்ச ஆண்டவன் உங்களையும் இந்திரனையும் திராசுல வச்சு அளந்து பார்த்தாரு

உங்களோட பேர் புகழ் ,திறமை ,வீரம் எல்லாம் இந்திரனோடத விட அதிகமா இருந்ததால இந்திரன் இருந்த பக்கம் உயர்ந்தும் உங்க பக்கம் தாழ்ந்தும் இருந்துச்சு ,அதனாலதான் மேலுலகத்துல இந்திரனையும்

மேலுலகம் இல்லாத அனைத்து உலகங்களுக்கும் உங்களையும் உயர்தவரா படைச்சாரு

திராசுல மேல உயர்ந்து இருந்ததாலதான் இந்திரன் உயந்தவர்னு சொன்னேன்னு சொன்னாரு பீர்பால்