The Sons-In-Law for Gallows – மருமகனுக்கு தூக்கு-Akbar Birbsl Story Collection

The Sons-In-Law for Gallows – மருமகனுக்கு தூக்கு-Akbar Birbsl Story Collection:-ஒருமுறை தனது மகளையும் மருமகனையும் பார்க்கணும்னு அக்பருக்கு ஆசவந்துச்சு

அதுக்காக அழைப்பு அனுப்புனாரு ஆனா அவரோட மருமகன் வரமாட்டேன்னு திரும்ப கடிதம் எழுதி அனுப்புனாரு

அதனால கோபமான அக்பர் ,இந்த நாட்டுல இருக்குற எல்லா மருமகன்களையும் தூக்குல போடுங்கனு சொன்னாரு ,அதுக்கு ஏற்பாடுகளை பீர்பால் செய்யட்டும்னு சொன்னாரு

மறுநாள் அக்பரை பார்க்க வந்த பீர்பால் சொன்னாரு ,அரசே நீங்க சொன்னமாதிரி எல்லாருக்கும் தூக்கு போட ,மைதானம் தயாரா இருக்கு ,அதுல தூக்கு மேதைகளும் தயாரா இருக்கு நீங்க ஒருக்க வந்து பார்வையிடுங்கனு சொன்னாரு

இத கேட்ட அக்பரும் பீர்பாலோட சேர்ந்து மைதானத்தை பார்வையிட போனாரு

அங்க போய் பார்த்தா ஒரே ஒரு தூக்கு மேடை மட்டும் தங்கத்துல அலங்கரிக்க பட்டு இருந்துச்சு

இது எதுக்கு இந்த தூக்குமேடை மட்டும் இப்படி அலங்காரமா இருக்குனு கேட்டாரு அக்பர்

அது உங்களுக்கு அரசே ,நீங்களும் ஒருத்தருக்கு மருமகன் தானே ,அதான் இந்த தங்க தூக்கு மேடை ,அதுவும் இல்லாம முதல்ல உங்களைத்தான் தூக்குல போடணும்னு எல்லா மருமகன்களும் ஆச படுறாங்கனு சொன்னாரு

தன்னோட முட்டாள் தனமான ஆணைய நினச்சு வருத்தப்பட்டு ,எல்லாரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டாரு அரசர்