The Pied Piper of Hamelin Story in Tamil – நீதி கதை தமிழில்

The Pied Piper of Hamelin Story in Tamil – நீதி கதை தமிழில் :- முன்னொரு காலத்துல ஹாம்லின் அப்படின்னு ஒரு நகரம் இருந்துச்சு,அந்த நகரத்துல நிறைய பேர் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்தாங்க .

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

அந்த நகரத்துல திடீர்னு எலிங்க தொல்ல அதிகமாச்சு ,எங்க பாத்தாலும் எலிகூட்டமாவே இருந்துச்சு .ஒரு இடம் விடாம எலிங்க சுத்திக்கிட்டு இருந்துச்சுங்க

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

எல்லா வீடு சமையலறையிலயும் சாப்பிட்ட பத்திரமாவே வைக்க முடியல ,எல்லாத்தையும் எலி கூட்டம் தின்னு தீக்க ஆரம்பிச்சுதுங்க

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

அந்த நகர வாசிகள் எல்லாரும் ரொம்ப கவலைப்பட்டாங்க ,எல்லோரும் ஒண்ணுக்கு கூடி இந்த எலி தொந்தரவ எப்படி போக்குறதுன்னு விவாதிச்சாங்க

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

அப்ப தான் இந்த சேதி கேட்டு ஒரு புல்லாங்குழல் ஊதுறவன் அங்க வந்தான்

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

பெரியோர்களே எனக்கு இந்த எலிகளை பிடிக்க தெரியும் ,எனக்கு நிறைய பணம் கொடுத்தீங்கன்னா இங்க இருக்குற எல்லா எலிகளயும் ஒரேநாள்ல என்னால பிடிக்க முடியும்னு சொன்னான்

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

அத கேட்ட நகர வாசிகள் சரின்னு சொன்னாங்க ,உடனே தன்னோட பைல இருந்து ஒரு புல்லாங்குழல எடுத்து வாசிக்க ஆரம்பிச்சான் ,

அந்த இசை ரொம்ப ரம்மியமா இருந்துச்சு ,உடனே எல்லா எலிகளும் அந்த இசைக்கு மயங்கி மெதுவா அவன் பின்னாடி நடக்க ஆரம்பிச்சதுங்க,

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

நகரத்துல இருக்குற எல்லா தெருவுக்கும் போன அவன் புல்லாங்குழல வாசிச்சுகிட்டே நடந்தான் ,அப்படியே மெதுவா காட்டுப்பாக்கம் போனான்

அங்க இருக்குற ஒரு மலைய கடந்து ஒரு பெரிய நதிக்குள்ள இறங்குனான் ,மயக்கத்துல இருந்த எலிங்க எல்லாம் அவன் பின்னாடியே நதிக்குள்ள குதிச்சதுங்க

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

அப்ப எல்லா எலிகளும் அந்த நதி தண்ணில முங்கிடுச்சுங்க ,தன்னோட வேலைய முடிச்சுட்டு தன்னோட பரிச வாங்க நகரத்துக்கு வந்தான் அவன்

எலி தொல்ல தீர்ந்த நகர வாசிங்க அவனுக்கு நன்றி சொன்னாங்க ,ஆனா அவன் கேட்ட பணத்த மட்டும் கொடுக்க பட்டேன்னு சொல்லி அவன ஏமாத்த பாத்தாங்க

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

கோபமான புல்லாங்குழல் ஊதுறவன் இன்னொரு புல்லளங்குழல எடுத்து ஊத்திக்கிட்டே நடக்க ஆரம்பிச்சான்

இந்த தடவ அந்த நகரத்துல இருந்த எல்லா குழந்தைகளும் அவன் பின்னாடிபோக ஆரம்பிச்சாங்க

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

எல்லா குழந்தைகளையும் கொட்டிட்டு காட்டுக்கு போன அவன் அங்க இருக்குற ஒரு குகைக்குள்ள அவுங்கள விட்டு பூட்டிட்டான்

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

குழந்தைகளை காணோம்னு தேடுன நகர்வாசிகளுக்கு உண்மை தெறிச்சது ,அடடா நாம ஒருத்தர ஏமாத்த நினைச்சு ,நம்ம ஏமாந்துட்டமேன்னு எல்லாரும் புல்லாங்குழல் ஊதுறவன தேடி போனாங்க

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

அவன் கிட்ட தயவு செய்து எங்கள மன்னிச்சிடுங்க எங்க குழந்தைகள திருப்பி அணிப்பிடுங்க ,உங்க பணம் இதோன்னு சொல்லி ,பணப்பைய அவன்கிட்ட கொடுத்தாங்க

The Pied Piper of Hamelin Story in Tamil - நீதி கதை தமிழில்

உடனே அந்த புல்லாங்குழல் ஊதுறவன் குகைய அடைச்சு வச்சிருந்த பாறைய தொறந்து எல்லா குழந்தைகளையும் வெளியில விட்டான்

அப்ப அந்த குழந்தைகள் கிட்ட சொன்னான் ,நீங்க ஒருத்தர ஏமாத்த நினைசீங்கன்னா நீங்க தான் ஏமாந்து போவீங்க ,அதனால யாரையும் ஏமாத்த நினைக்காம நல்லபடியா வாழுங்கனு சொல்லி அனுப்பிச்சான் .