யானையும் சிங்கமும் – The Elephant and Lion Moral Story

யானையும் சிங்கமும் – The Elephant and Lion Moral Story:- ஒரு காட்டுக்குள்ள ஒரு யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு

ஒருநாள் அந்த யான காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு

அப்ப ஒரு சின்ன பள்ளத்துக்குள்ள விழுந்துடுச்சு அந்த யானை

ரொம்ப பயந்துபோன யானை மெதுவா வெளிய வர பார்த்துச்சு

எவ்வளவு முயற்சி செஞ்சும் அதனால வெளிய வர முடியல

அதனால யாராவது உதவிக்கு வாங்கனு சத்தம் போட்டு கத்துச்சு

யானையோட சத்தத்த கேட்ட சிங்கம் ஒன்னு அங்க வந்துச்சு

குழிக்குள்ள எட்டி பார்த்த சிங்கம் என்ன யானையாரே குழிக்குள்ள விழுந்துடீங்களானு கேட்டுச்சு

அதுக்கு ஆமான்னு சொன்ன யானை தன்ன குழியில இருந்து காப்பாத்த சொல்லி கேட்டுச்சு

அதுக்கு சிங்கம் சொல்லுச்சு இந்த காட்டுலயெ பலசாலி நீங்கதான் ,உங்கள காப்பாத்த இந்த காட்டுல யாரும் இல்ல

உங்களோட முயற்சிக்கு வேணும்னா நான் துணையா இருக்கேன் ஆனா என்னால உங்க எடைய தாங்க முடியாதுனு சொல்லுச்சு

உடனே யானையும் சிங்கமும் சேர்ந்து பிரச்னையை எப்படி சமாளிக்குறதுனு யோசிச்சுங்க

உடனே பக்கத்துல இருந்து சின்ன சின்ன பாறையை எல்லாம் குழிக்குள்ள தள்ளி விட்டுச்சு சிங்கம்

அந்த பாறைகளை எல்லாம் கொஞ்ச கொஞ்சமா அடுக்கு குழிக்குள்ள இருந்து வெளிய வந்துச்சு அந்த யானை