ஒரு பாட்டில் பால்

சிறுவன் ஒருவன் ஒரு சின்ன கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தான்

பள்ளிக்கூடம் போக வசதியில்லாத அந்த பையன்

தினமும் காலைல பேப்பர் போட்டு அதுல வர்ற சம்பாத்தியத்தை வச்சு

பள்ளிக்கூடம் போயி படிச்சான்

அப்படி ஒருநாள் காலைல பப்பேர் போடா போனப்ப அவனுக்கு ரொம்ப பசிச்சது

உடனே பேப்பர் போட போன வீட்ல இருந்தவங்க கிட்ட உணவு ஏதாவது இருந்தா கொடுங்கன்னு கேட்டான்

அந்த பையனோட தோற்றத்தை பாத்த அந்த வீட்டு காரங்க உணவு கொடுக்க மறுத்தாங்க இதுமாதிரி

எல்லா வீட்லையும் உணவு கொடுக்க மறுக்கவே ரொம்ப சோர்ந்து போனான் அந்த பையன்

ஒரு விட்டல ஒரு சின்ன பொண்ணு அந்த பையனுக்கு ஒரு பாட்டில்ல பால் கொடுத்தா

தன்னோட பசிக்கு பால் கொடுத்த அந்த பொண்ணு கிட்ட இந்த பாலுக்கு நான் எவ்வ்வளு பணம் தரனும்மு கேட்டான் அந்த பையன்

அதுக்கு அந்த பொண்ணு பணம் எல்லாம் வேணாம்னு சொல்லிட்டா

சில காலங்களுக்கு அப்புறமா அந்த சின்ன பொண்ணு பெரிய பொண்ணா வளந்துட்டா

அவளுக்கு உடம்புக்கு அடிக்கடி சரில்லாம போச்சு

உடனே பக்கத்தது டவுன்ல இருக்குற டாக்டர் கிட்ட போனாங்க

அந்த டாக்டர் ரொம்ப கனிவோடு அந்த பொண்ண செக் பண்ணி

மருத்துவம் பாத்தாரு

ஒரு மாசத்துக்கு அப்புறமா அந்த பொண்ணுக்கு உடம்பு சரியாய் போனது

அடடா ஒரு மாசம் வைத்தியம் பாத்த டாக்டர்க்கு கொடுக்க தன் கிட்ட கொஞ்ச பணம் தானே இருக்குன்னு யோசிச்சாங்க

அப்பத்தான் டேபில்ல ஒரு பில் இருக்குறத பாத்தாங்க

அந்த பில்லுல “அனைத்து செலவுகளும் அடைக்க பட்டன ,ஒரு பாட்டில் பாலால் ” அப்படினு எழுதி இருந்துச்சு

தனக்கு வைத்தியம் பாத்த அதே டாக்டர் தான் அந்த நியூஸ் பேப்பர் போடுற பையன்கிறத நினைச்சு சந்தோச பட்டாங்க அந்த பொண்ணு