Taking Friends Place Kids Story – நல்ல நண்பன் குழந்தைகள் சிறுகதை

Taking Friends Place Kids Story – நல்ல நண்பன் குழந்தைகள் சிறுகதை :- ஒரு நாட்டுல ஒரு போராளி இருந்தாரு அவரு பேரு சிவம் , அவருக்கு அரசாங்கத்த எதுத்து போராட்டம் பண்றதுதான் வேலையே

Taking Friends Place Kids Story

ஒருநாள் அவரை அந்த நாட்டோட ராஜா புடிச்சிட்டு வர சொல்லி அவருக்கு தூக்கு தண்டன கொடுத்தாங்க

சிவம் அரசர்கிட்ட ஒரு உதவி கேட்டாரு நான் என் குடும்பத்த ஒரு தடவ பாக்கணும் என்ன விடுங்கன்னு கேட்டாரு

அதுக்கு அரசர் அப்படி உனக்கு சலுகை கொடுக்க முடியாதுன்னு சொன்னாங்க

சிவமோட நண்பர் நளன் முன்வந்து அவரை அனுப்புங்க நான் அவரோட இடத்துல இருக்கிறேன் அப்படின்னு சொன்னாரு

நளனோட பேச்ச கேட்ட அரசர் அனுமதி கொடுத்தாங்க

வேகமா வீட்டுக்கு போயிட்டு திரும்பும்போது குதிரை கீழ விழுந்து சிவத்துக்கு ஆதி பட்டுடுச்சு

நேரம் ஆனதுனால சிவத்துக்கு பதிலா நளன தூக்குல போட தயாரானாங்க

மெதுவா வந்த சிவம் நான் வந்துட்டேன் என் நண்பன் நளன் நல்லவன் அவனை விட்டுடுங்கன்னு சொன்னாரு

வேணாம் சிவம் உனக்கு பதிலா நான் இங்க இருக்கேன் நீ உன் குடும்பத்தோட நல்லா இருன்னு சொன்னாரு

நண்பர்களோட இந்த விட்டுக்கொடுக்குற புத்திய பாத்தது நெகிழ்ந்து போன அரசர் ரெண்டு பேரையும் மன்னிச்சு விட்டுட்டாரு

நீதி : நல்ல நண்பர் எப்பவும் உங்கள நம்பி உங்க பக்கத்துல இருக்கணும்