கடவுளின் கருணை – Gods Work Tamil Sirukathai

கடவுளின் கருணை – Gods Work Tamil Sirukathai- Tamil Short Stories for Kids :- ராம் ஒரு பட்டதாரி , ஒருநாள் அவன் ஊருக்கு போக பஸ் ஸ்டாண்ட் போனான்

கடவுளின் கருணை - Gods Work Tamil Sirukathai

பஸ் லேட்டாகும் அதனால சாப்பிடலாம்னு பக்கத்து தெருவுக்கு நடந்து போனான்

அங்க ரெண்டு சின்ன பையன்கள் உக்காந்து இருந்தாங்க

அவுங்க ஏழ்மை நிலைய உணர்ந்த ராம் அவுங்களுக்கு 10 ரூபாய் கொடுத்தான்

மேலும் நடந்த ராமுக்கு திடீர்னு நம்ம கொடுத்த பத்து ரூபாய்க்கு அவுங்களால சாப்பிட முடியாதுன்னு தோணுச்சு

உடனே திரும்பி வந்து அவுங்க ரெண்டு பேரையும் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி சாப்பாடு வாங்கி கொடுத்தான்

பஸ் பிடிச்சு ஊருக்கு வந்த ராமுக்கு கவலையா இருந்தது

அந்த பசங்க இன்னேரம் சாப்ட்ருப்பாங்களா அவுங்களுக்கு யாராவது உதவிருப்பாங்களானு கவலையா இருந்துச்சு

அப்பதான் அவனுக்கு தோணுச்சு கடவுள் எப்பவும் அடுத்தவங்களுக்கு உதவணும்ங்கிற என்னத்த தன்னுள்ளே விதைச்ச மாதிரி தேவைப்படும்போது அடுத்தவங்களுக்கு விதைப்பாரு

அந்த பசங்க சாப்ருப்பாங்கன்னு ஒரு திருப்தி வந்தது