Mulla Visits the Prisoners- சிறைச்சாலையில் முல்லா :- கிராமத்துல வாசிச்சிகிட்டு இருந்த முல்லாவுக்கு பிறந்தநாள் வந்துச்சு

எப்பவும் அனாதை குழந்தைகளோட கொண்டாடுர முல்லா இந்த தடவ அவசர பட்டு தப்பு செஞ்சுட்டு வாழ்நாள் முழுவதும் சிறையிலே இருக்குற கைதிகளோட கொண்டாடலாம்னு நினைச்சாரு

உடனே பக்கத்துல இருந்த சிறைச்சாலைக்கு போனாரு ,அங்க இருந்த ஒவ்வொரு கைதிக்கும் இனிப்பு பொட்டலம் வாங்கிட்டு போனாரு முல்லா

அங்க இருந்த சிறை அதிகரிக்கிட்ட அனுமதி கேட்டாரு ,அந்த சிறை அதிகாரி சொன்னாரு இங்க இருக்குற குற்றவாளிங்க எல்லாரும் ரொம்ப பெரிய தப்பு செஞ்சுட்டு இங்க வந்து இருக்காங்க ,நீங்க உள்ள போய் சந்திக்கிறப்ப உங்க கிட்ட அவனுங்க என்ன சொன்னாராம் நம்பாதிங்கனு சொல்லி அனுமதி கொடுத்தாரு

உடனே தான் கொண்டு வந்த இனிப்பு பொட்டலத்தை முதல்ல இருந்த கம்பி போட்ட சிறை அறைக்கு முன்னாடி போனாரு ,அங்க ஒரு அப்பாவி முகத்தோட ரொம்ப சாந்தமா உக்காந்து இருந்தாரு ,அவருக்கு இனிப்ப கொடுத்ததும் அந்த கைதி சொன்னாரு ஐயா நான் எந்த குற்றமும் செய்யல ,என்ன எப்படியாவது காப்பாத்துங்கனு சொன்னாரு

அடுத்த அறைக்கு போனதும் அந்த கைதி சொன்னாரு நீங்க பார்க்க நல்லா இருக்கீங்க நான் செஞ்ச தப்புக்கு என்ன இத்தனை வருஷம் தூண்டிச்சுட்டாங்க என்ன எப்படியாச்சும் வெளியில கொண்டு வந்துடுங்கனு சொன்னாரு ,இத கேட்டதும் கேக்காமலும் இந்த முல்லா இனிப்பு பொட்டலத்தை கொடுத்துட்டு அடுத்த அறைக்கு போனாரு

எல்லாரும் இதே மாதிரி சொல்லிகிட்டே இருந்தாங்க ,நான் குற்றமே செய்யல ,நான் சின்ன தப்புதான் செஞ்சேன் ,என்ன நடக்குதுனே புரியாம இருந்த முல்லாவுக்கு சிறை அதிகாரி சொன்ன விஷயம் ஞாபகத்துல இருந்ததால தொடர்ந்து இனிப்பு கொடுத்துகிட்டே போனாரு

அப்பத்தான் ஒரு அறையில இருந்தவாறு சொன்னாரு ,நான் நிறய தவறான விஷயம் செஞ்சுட்டேன் ,தவறான நண்பர்களோட சேர்ந்து நிறைய தவறு செஞ்ச எனக்கு நீங்க கொடுக்குற இனிப்பு கூட வேணாம் ,நான் தண்டனை கைதி நான் சிறை உணவு சாப்பிட்டு தண்டனை அனுபவிக்கணும்ங்கிறது சட்டம்னு சொன்னாரு

திடுக்கிட்டு போன முல்லா வேகமா சிறை அதிகரிக்கிட்ட போனாரு ,ஐயா நான் ஒரு கைதியை சந்திச்சேன் ,இந்த சிறையிலேயே அவருதான் ரொம்ப நேர்மையா இருக்காருனு சொன்னாரு ,இத கேட்ட சிறை அதிகாரி சொன்னாரு இங்க இருக்குற எல்லா கைதிகளும் நேர்மையா விசாரிச்சு கொடூர குற்றம் செஞ்சுட்டு இங்க வந்து எப்படி வெளிய போறதுன்னு நிறைய பொய் சொல்றாங்க

ஆனா அவரு மட்டும் தன்னோட தவற உணர்ந்து தன்னோட தண்டனை காலத்தை கழிக்க இங்க இருக்காருன்னு சொன்னாரு ,அப்பத்தான் முல்லா சொன்னாரு இவரை முதல்ல வெளிய எடுக்கணும் இல்லைனா மிக பெரிய குற்றம் செஞ்சுட்டு இன்னும் பொய் சொல்லிகிட்டே திரியிற இவனுங்கள மாதிரி கைதிங்க கூட அவரு இருக்க கூடாதுனு சொன்னாரு

அப்பதான் சிறை அதிகாரி சொன்னாரு , நீங்க வேணும்னு அரசுக்கு அவரோட நன்னடத்தை பத்தி கடிதம் எழுதுங்க அவருக்கு உதவியா இருக்கும்னு சொன்னாரு

ஏதோ சூழ்நிலையில தப்பு செய்ய ,அதுக்கு கிடைச்ச தண்டனையை ஏத்துக்கிட்டு திருந்து வாழுறவங்க நாம் மதிக்கணும்னு எல்லாருக்கும் சொல்லுறதுக்கான கதை இது
