தவளையும் பொறுமையும் பெருமையும் The Frogs Who Saved the Forest:-முன்னாடி ஒரு காலத்துல இருந்த குவா காட்டுக்குள்ள நிறைய ஆறுகளும் அருவிகளும் குளங்களும் இருந்துச்சு அங்க தண்ணி பஞ்சமே இல்ல அதனால அங்க நீர்வாழ் உயிரினங்களும் அதிகமா தண்ணி குடிக்கிற வனவிலங்குகளும் அதிகமா வாழ்ந்துட்டு வந்துச்சுங்க

அப்படி இருக்கப்பத்தான் பக்கத்துக் காட்டுல இருந்து ஒரு தவளை கூட்டம் குவா காட்டுக்குள்ள வந்துச்சு அங்க வந்த தவலைகளை பார்த்த காட்டு மிருகங்கள் நீங்க என்ன இங்க வந்து இருக்கீங்க அப்படின்னு கேட்டுச்சுங்க அப்பத்தான் தவளை கூட்டத்தோட தலைவர் சொன்னாரு நாங்க பக்கத்து காடான கவா காட்டுல வாழ்ந்துகிட்டு வந்தோம்

அங்க 12 வருஷமா மழை பெய்யாததுனால ரொம்ப வறட்சிய போயிடுச்சு எங்களுக்கு குடிக்க கூட தண்ணி இல்ல நாங்க ஒரு நீர்வாழ் உயிரினம் நாங்கள் தண்ணி இல்லைனா ரொம்ப கஷ்டப்படுவோம் அதனால இந்த குவா காட்ட பத்தி தெரிஞ்சுக்கிட்டு இங்க இருக்கிற நீர் நிலைகள்ல வாழலாம்னு வந்திருக்கும் அப்படின்னு சொல்லுச்சுங்க

இதைக் கேட்ட வனவிலங்குகள் சிரிச்சுக்கிட்டே நீங்க அவலட்சணமா பச்சை நிறமா அசிங்கமா இருக்கீங்க நீங்க நாங்க குடிக்கிற தண்ணி இருக்கிற குளத்து பக்கம் போகாதீங்க அப்படின்னு சொல்லி தவளை கூட்டத்தை அங்கு இருந்து விரட்ட பாத்துச்சீங்க

அப்பத்தான் அங்க வந்தேன் நரி சொல்லுச்சு எந்த காடும் காட்டுல இருக்குற நீர் நிலைகளும் யாருக்கும் சொந்தமில்லை நம்ம காட்ட நம்பி இங்க வந்த தவளை கூட்டத்தை விரட்டுவது தப்பு உங்களுக்கெல்லாம் அதுங்கள பிடிக்கலைனாலும் அதுங்களுக்கு இங்க வாழ உரிமை இருக்கு அப்படின்னு சொல்லுச்சு கண்டிப்பான நரி

இதைக் கேட்ட வனவிலங்கு கோவத்துல ரொம்ப சத்தம் போட ஆரம்பிச்சுசுங்க அப்பத்தான் நரி சொல்லுச்சு சரி விடுங்க நம்ம பயன்படுத்துற நீர்நிலைகளை விட்டுட்டு ரொம்ப நாள் சுத்தமா இல்லாம தேங்கிக் கிடக்கிற குட்டி குளத்துல இவங்கள வாழ வச்சிடலாம் அப்படின்னு சொல்லுச்சு இதைக் கேட்ட வனவிலங்குகள் அதுவும் சரிதான் நாங்க பயன்படுத்துற நீர் நிலைகள் பக்கம் இந்த தவளை கூட்டம் வரக்கூடாது அப்படின்னு சொல்லுச்சுங்க

நரியாருடைய உதவியோட தங்களுக்கு வாழ ஒரு நல்ல இடம் கிடைச்சிருச்சுன்னு நினைச்ச கவலை கூட்டம் நேரா அந்த அசுத்தமான குளத்து பக்கம் போச்சுங்க அங்க இருந்த தண்ணி ரொம்ப கலங்கலாவும் நிறைய பாசி பிடித்து போய் இருந்துச்சுங்க குடிக்கிறதுக்கு கூட தண்ணி இல்லாத கவா காட்டு தவளை கூட்டம் அந்த குளத்துக்குள்ளையே தங்களுடைய வாழ்க்கையை ஆரம்பிச்சுச்சுங்க

அப்படி இருக்கப்பத்தா காவாக்காடு மாதிரியே குவா காட்டுலையும் தண்ணி பஞ்சம் வந்துச்சு காட்டு மிருகங்கள் தண்ணீர் குடிக்க மட்டுமில்லாமல் பறவைகள் கூட தண்ணி இல்லாத நிலை வந்துச்சு அப்பத்தான் எல்லாம் மிருகங்களும் கவனிச்சதுங்க அசுத்தமான நீர் இருக்கிற குட்டி குளம் இப்ப தூய நீர் இருக்கிற தெளிவான நீரோட இருந்தத

அப்பத்தான் எல்லாம் மிருகங்களும் ஒரு உண்மைய தெரிஞ்சு தங்க அசுத்தமான தண்ணி இருக்கிற குளத்தை ஒதுக்கி வச்சோம் நம்மள தேடி வந்த தவளை கூட்டத்தையும் அங்க தங்க வச்சோம் ஆனால் அந்த தவளை கூட்டம் தங்களோட புது வசிப்பிடமான அசுத்தமான குளத்த கொஞ்சம் கொஞ்சமா சுத்தப்படுத்தி இப்பொழுது அது நல்ல நிலையில இருக்கு இனிமே நமக்கு குடிக்கிறதுக்கு தண்ணி வேணும்னாலும் அவங்க அனுமதி தேவை அப்படின்ற உண்மையை எல்லாம் மிருகங்களும் உணர்ந்துச்சுங்க

எல்லா மிருகங்களும் குடிக்கக்கூட தண்ணி இல்லாம கஷ்டப்படுவதை பார்த்த அந்த தவளைகளோட தலைவன் நரியார் கிட்ட வந்து நரியே நரியே உன்னால தான் எங்களுக்கு இந்த குளம் கிடைச்சுச்சு எங்களுடைய கடின உழைப்பாள இந்த குளம் இப்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த தண்ணிய வனவினங்கள் குடிச்சிக்கிறதுல எங்களுக்கு எந்த ஆட்சபனமையும் இல்ல அப்படின்னு சொல்லுச்சு

இதையெல்லாம் மிருகங்களுக்கு அறிவித்த நரி எல்லா மிருகங்களையும் மரியாதையோடு நடத்தி ஒவ்வொரு மிருகங்களுக்கும் காட்டுல எல்லாத்தையும் அனுபவிக்கிற உரிமை இருக்கின்றதா விதியா சொல்லுச்சு இதைக் கேட்டு எல்லாத்தையும் சம்மதித்த காட்டு விலங்குகள் தவளைகளோடு நண்பர்களாக மாறி தண்ணி இல்லாத பஞ்ச காலத்தையும் நல்லபடியா கடந்து வசந்த காலத்தை எதிர்பார்த்து காத்து இருந்தாங்க
