Whatever You Liks- விரும்பிய வைரம்-Akbar Birbal Stories

Whatever You Liks- விரும்பிய வைரம்-Akbar Birbal Stories:-ஒரு விவசாயி ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சி தன்னோட சேமிப்பு எல்லாத்தையும் வைரமா வாங்கி வீட்டுல வச்சிருந்தாரு

அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கு கூட தெரியாது இவரு இவ்வளவு வைரம் சேமிச்சு வச்சிருக்காருனு

ஒருநாள் அவரோட வீடு தீப்பிடிச்சி எரிய ஆரம்பிச்சுச்சு ,ரொம்ப அழுதாரு அந்த விவசாயி ,அப்ப பக்கத்து வீட்டுக்காரர் அங்க வந்து ஆறுதல் சொன்னாரு

எதுக்கு அழுகுறீங்க உங்க கிட்டத்தான் ஒண்ணுமே இல்லையேன்னு சொன்னாரு ,அப்பத்தான் அந்த விவசாயி சொன்னாரு தான் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு எல்லாத்தையும் வைரம் வாங்கி வச்சிருக்கேன்னு

உடனே அந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு நான் வேணும்னு தீக்குள்ள போயி அந்த வைரத்தை எடுத்துட்டு வரேன் ஆனா எனக்கு பிடிச்சதை தான் உனக்கு கொடுப்பேன்னு சொன்னாரு

விவசாயியும் சரினு சொன்னாரு ,உடனே அந்த பக்கத்து வீட்டுக்காரர் தீக்குள்ள போயி அந்த வைர நகைகள் இருந்த பெட்டிய எடுத்துட்டு வந்தாரு

ஆனா வைரத்த விவசாயி கிட்ட கொடுக்காம அந்த பெட்டிய மட்டும் கொடுத்தாரு ,எனக்கு புடிச்சதுதான் கொடுத்திருக்கேன்னு சொல்லிட்டாரு

உடனே பீர்பால் கிட்ட இந்த விஷயம் போச்சு ,ரெண்டு பேரையும் கூப்பிட்டு விசாரிச்சார் அக்பர்

அங்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு பீர்பால் அவர்களே எனக்கு பிடிச்சததான் உனக்கு கொடுப்பேன்னு சொல்லிட்டு தான் நான் தீ குள்ள போனேன் ,இப்ப மாத்தி பேசுறது இந்த விவசாயி தானு சொன்னாரு அவரு

அப்பத்தான் பீர்பால் கேட்டாரு அப்ப உனக்கு அந்த வைரங்கள் ரொம்ப பிடிச்சிருக்கானு கேட்டாரு ,உடனே அந்த பக்கத்து வீட்டுக்காரரும் ஆமான்னு சொன்னாரு

அப்ப அந்த வைரத்தை விவசாயி கிட்ட கொடுங்கனு சொன்னாரு ,அதுக்கு ஒண்ணுமே புரியாம முழிச்சாரு அந்த பக்கத்து வீட்டுக்காரர்

அப்பத்தான் பீர்பால் தெளிவா சொன்னாரு உங்களுக்கு பிடிச்சதை தான் கொடுப்பேன்னு நீங்க வாக்கு கொடுத்திருக்கீங்க ,இப்ப உங்களுக்கு அந்த வைரம் ரொம்ப பிடிச்சிருக்கு அதனால அந்த வைரத்தை திருப்பி கொடுத்துடுங்கனு சொன்னாரு

பீர்பாலோட தீர்ப்பு எல்லாராலயும் புகழ பட்டுச்சு