Thumbelina Story in Tamil- தம்பலினா குட்டி தேவதை கதை

Thumbelina Story in Tamil- தம்பலினா குட்டி தேவதை கதை :- முன் ஒரு காலத்துல ஒரு கிராமம் இருந்துச்சு

thumbelina-story-in-tamil

அங்க ஒரு அம்மா வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அவுங்க ரொம்ப தனிமையா இருந்ததால ஒரு குழந்தை வேணும்னு கடவுள் கிட்ட வேண்டிகிட்டே இருந்தாங்க

thumbelina-story-in-tamil

அப்ப ஒருநாள் ஒரு சூனிய கார கிழவியை சந்திச்சாங்க ,தனக்கு ஒரு குழந்தை வேணும்னு அந்த கிழவிகிட்ட கேட்டாங்க அந்த அம்மா

thumbelina-story-in-tamil

உடனே அந்த கிழவி ஒரு தங்க விதையை கொடுத்து இந்த விதையை உன் வீட்டு தோட்டத்துல போடு உனக்கு ஒரு குழந்தை கிடைக்கும்னு சொன்னாங்க

thumbelina-story-in-tamil

வீட்டு வந்த அந்த அம்மா பெரிய குழி தோண்டி அந்த தங்க விதைய பொதச்சி வச்சாங்க

thumbelina-story-in-tamil

மறுநாள் வந்து பார்த்தா அது ஒரு செடியா மாரி ஒரு தங்க பூ பூத்திருந்துச்சு

thumbelina-story-in-tamil

வேகமா அந்த பூவை திறந்து பார்த்தாங்க அந்த அம்மா உள்ள ஒரு அழகான குட்டி குழந்தை இருந்துச்சு

thumbelina-story-in-tamil

அந்த குழந்தை கட்ட விறல் அளவே இருந்ததால அந்த குழந்தைக்கு ஆங்கிலத்துல கட்டை விரலை குறிக்கிற சொல்லான தம்ப் (Thumb)வோட சேர்த்து தம்பலினானு பேர் வச்சாங்க

thumbelina-story-in-tamil

அவ ரொம்ப குட்டியா இருந்ததால அவளை ரொம்ப பத்திரமா பார்த்துக்கிட்டாங்க அந்த அம்மா

கொஞ்ச நாள்லயே அவ பெரிய பெண் ணா வளர்ந்தா இருந்தாலும் அவ கட்டைவிரல் அளவே உயரம் இருந்தா

thumbelina-story-in-tamil

ஒருநாள் ஜன்னல் வழியா ஒரு தவளை அங்க வந்துச்சு ,தம்பலினா அழக பார்த்த அந்த தவளை அவளை தூக்கிட்டு போய் தாமரை இலையில சிறை வச்சுச்சு

thumbelina-story-in-tamil

தம்பலினா ரொம்ப பயந்து போய்ட்டா ,அந்த தவளை அவளை கல்யாணம் செஞ்சுக்கிட சொல்லி கேட்டுச்சு ,உடனே ரொம்ப பயந்து போய் அழ ஆரம்பிச்சா

thumbelina-story-in-tamil

இத அங்க இருந்த மீன்கள் எல்லாம் கேட்டுச்சுங்க ,உடனே அந்த தாமரை தண்ட கடிச்சி தம்பலினாவ விடுதலை செஞ்சதுங்க

தண்ணியில விழுந்த அந்த தாமரை இலை தண்ணியில படகு மாதிரி போய்கிட்டே இருந்துச்சு

thumbelina-story-in-tamil

அப்ப ஒரு பெரிய வண்டு அவளை பார்த்துச்சு ,உடனே அதுவும் அவளை தூக்கிட்டு வந்து தன்கூடவே ஒரு தோட்டத்துல வச்சிக்கிடுச்சு

thumbelina-story-in-tamil

அந்த வண்டும் தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கயே இருக்க சொல்லி கேட்டுச்சு

thumbelina-story-in-tamil

தம்பலினாவுக்கு என்ன செய்றதுன்னே தெரியல ,எப்படி இந்த பெரிய வண்டுகிட்ட இருந்து தப்பிக்கிறதுனு பார்துகிட்டே இருந்தா

ஒருநாள் அந்த தோட்டத்துல ஒரு சின்ன கதவை பார்த்தா ,உடனே அந்த கதவை தட்டுனா

thumbelina-story-in-tamil

உள்ள ஒரு எலி இருந்துச்சு ,அந்த எலி அவளை அந்த சின்ன குகைக்குள்ள இருந்துகிட அனுமதிச்சுச்சு

thumbelina-story-in-tamil

கொஞ்ச நாள் கழிச்சி இன்னொரு எலி அங்க வந்துச்சு ,அந்த எலி தம்பலினாவ கல்யாணம் பண்ணிகிட சொல்லி கேட்டுச்சு

thumbelina-story-in-tamil

அப்பத்தான் ஒரு குட்டி குருவி அங்க வந்து விழுந்துச்சு ,உடனே தம்பலினா அந்த குருவிக்கு வைத்தியம் செய்ய ஆரம்பிச்சா

thumbelina-story-in-tamil

கொஞ்ச நாள்ள அந்த பறவை நல்லா ஆகிடுச்சு ,அந்த பறவைக்கிட்ட தன்னோட கதைய அந்த குருவிகிட்ட சொன்னா தம்பலினா

எல்லாரும் என்ன கல்யாணம் பண்ணிக்கிட சொல்லி கேக்குறாங்க ஆனா எனக்கு என்னோட அம்மாகிட்ட போகணும்னு சொல்லி அழுதா

thumbelina-story-in-tamil

அப்பத்தான் அந்த குருவி எனக்கு உன்னமாதிரியே ஒரு குட்டி பையனை தெரியும் அவன்கிட்ட உன்ன கூட்டிட்டு போறேன் அவன் உனக்கு உதவி செய்வான்னு சொல்லுச்சு

thumbelina-story-in-tamil

உடனே தம்பலினாவ அந்த பையன்கிட்ட கூட்டிட்டு போச்சு அந்த குருவி,

அந்த பையன் சொன்னான் நீ ரொம்ப குட்டியா இருக்குற பிரச்னை இல்லை உனக்கு என்ன மாதிரி இறகு இல்லாதது தான் பிரச்சனைன்னு சொல்லி ஒரு மந்திரம் சொன்னான்

thumbelina-story-in-tamil

உடனே ரொம்ப அழகான ரெக்கை தம்பலினாவுக்கு வந்துடுச்சு ,உடனே அவளோட அம்மாகிட்ட பறந்து போய்ட்டா