The Ugly Duckling Tamil Fairy Tales – அசிங்கமான வாத்து கதை

The Ugly Duckling Tamil Fairy Tales – அசிங்கமான வாத்து கதை :- ஒரு குட்டைக்கு பக்கத்துல ஒரு வாத்து கூட்டம் இருந்துச்சு ,

அந்த வாத்து கூட்டத்துல ஒரு வாத்து நிறைய முட்டைகள் இட்டு குஞ்சி பொறிக்க காத்துகிட்டு இருந்துச்சு

கொஞ்ச காலத்துக்கு அப்புறமா ஒவ்வொரு முட்டையா ஒடஞ்சு குட்டி குட்டி வாத்துகலா வெளியில வர ஆரம்பிச்சது

கடைசியா வித்தியாசமா ஒரு வாத்து வெளியில வந்துச்சு

மத்த வாத்துக எல்லாம் சொல்லுச்சு நீ ரொம்ப அசிங்கமா இருக்கன்னு

ரொம்ப வறுத்த பட்ட அந்த வாத்து மெதுவா நடந்து வேற இடத்துக்கு போக ஆரம்பிச்சது

கொஞ்ச கொஞ்சமா தனியா வளந்த அந்த வாத்து பெருசா ஆகிடுச்சு

ஒருநாள் ஒரு நதிக்கரையோரம் தான் ஏன் இவ்வளவு அசிங்கமா இருக்கோம் மத்த வாதுங்க மாதிரி நாம எப்ப மாறுறதுன்னு நினைச்சு வறுத்த போட்டுக்கிட்டு இருந்துது

அப்பத்தான் ஒரு அன்ன பறவை கூட்டம் அங்க வந்துச்சு

பறவையே நீ ஏன் இங்க இருக்கன்னு கேட்டுச்சுங்க

அதுக்கு நான் ஒரு அசிங்கமான வாத்துனு சொல்லுச்சு

அப்ப ஒரு அன்ன பறவை சொல்லுச்சு கொஞ்சம் முன்னாடி வந்து ஒன்னோட உருவத்த அந்த தண்ணில பாருன்னு சொல்லுச்சு

உடனே அந்த வாத்தும் தண்ணில பாத்துச்சுது , அடடா என்ன என் உருவம் உங்கள போலவே மாறிடுச்சு அப்படினு கேட்டுச்சு

ஆமாம் நீ அசிங்கமான வாத்து கிடையாது ,நீ அழகான அன்ன பறவை

உன்ன பத்தி நீ தெரிஞ்சிக்காம அடுத்தவங்க சொல்றத கேட்டு இத்தன நாள் வறுத்த பட்டுருக்கான்னு சொல்லுச்சு

உடனே அந்த அன்ன பறவை தன்னோட தவற உணர்ந்து அந்த அன்ன பறவைங்களோட கூட்டத்துலயே சேந்துடுச்சு