தங்க ஆப்பிள் The golden apple story

தங்க ஆப்பிள் The golden apple story :- ஒரு காட்டுக்கு பக்கத்துல இரண்டு சகோதரர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அதுல அண்ணன் தன்னோட தம்பிய எப்பவும் அடித்துக்கிட்டே இருப்பான்

தங்க ஆப்பிள் The golden apple story

தம்பிக்கு கொடுக்காம எல்லா பொருளையும் தானே வச்சுக்கிட்டு சுயநலமா இருந்தான் அந்த அண்ணன்,அண்ணன் எவ்வளவுதான் கொடும பண்ணுனாலும் தம்பி அமைதியாவே இருப்பான்

தங்க ஆப்பிள் The golden apple story

ஒரு நாள் அந்த அண்ணன் காட்டுக்கு விறகு வெட்ட போனான் ,நிறைய விறகுகள வெட்டுனான் அவன் ,அப்ப அங்க ஒரு தங்க ஆப்பிள் மரத்த பாத்தான் அந்த அண்ணன்

தங்க ஆப்பிள் The golden apple story

உடனே அந்த தங்க ஆப்பிள் மரத்த வெட்ட போனான் , அப்ப ஆப்பிள் மரம் சொல்லுச்சு என்ன விட்டத நான் உனக்கு நிறைய தங்க ஆப்பிள் தரேன்னு சொல்லுச்சு

தங்க ஆப்பிள் The golden apple story

பேராசை பிடிச்ச அந்த அண்ணன் தங்க ஆப்பிள விட உன்ன வெட்டுனா நிறைய பணம் கிடைக்கும்னு சொல்லி வெட்ட போனான்

கோபமான அந்த தங்க மரம் தங்க ஊசிநால அவன குத்துச்சு,வலி தாங்காம அங்கேயே விழுந்தான் அந்த அண்ணன்

தங்க ஆப்பிள் The golden apple story

தன்னோட அண்ணன் வீட்டுக்கு வராததுநால காட்டுக்கு போன அந்த தம்பி ,ஊசி குத்தி கீழ கிடந்த அண்ணன பாத்து வறுத்த பட்டான்

அப்ப அந்த மரம் சொல்லுச்சு நான் உனக்கு தங்க ஆப்பிள் தரேன் அவன இங்கயே விட்டுட்டு போய்டுன்னு சொல்லுச்சு

தங்க ஆப்பிள் The golden apple story

அத கேட்ட தம்பி சொன்னான் எனக்கு என் அண்ணன் தான் வேணும்போ சொன்னான் ,உடனே அந்த ஆப்பிள் மரம் ஆயிரக்கணக்கான தங்க ஆப்பிள்கள கொட்டுச்சு

தங்க ஆப்பிள் The golden apple story

தன்னோட கொடுமைய கூட தாங்கிகிட்டு தன்ன காப்பாத்துன தம்பிய பாத்து மன்னிப்பு கேட்டான் அந்த அண்ணன்

தங்க ஆப்பிள் The golden apple story

அப்ப அந்த ஆப்பிள் மரம் சொல்லுச்சு ,இந்த உலகத்துலயே சுயநலம் இல்லாம இருக்குறவங்களுக்குத்தான் எல்லாமே கிடைக்கும்,அதனாலதான் நிறைய ஆப்பிள் உங்களுக்கு கிடைச்சது இனியும் சுயநலமில்லாம உன்னோட தம்பி கூட இருன்னு சொல்லி அனுப்புடிச்சு

Download Kids Story in Tamil PDF

Download Golden Apple Story in Tamil – Download Now