வாலில்லா நரி |The Fox without a Tail

வாலில்லா நரி |The Fox without a Tail :- ஒரு காட்டு பகுதியில ஒரு நரி நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அந்த நரிக்கு ரொம்ப பசிச்சதால உணவு மட்டுமே தேடிகிட்டு வேகமா நடந்துச்சு

வாலில்லா நரி |The Fox without a Tail

திடீர்னு டம்முனு ஒரு சத்தம் கேட்டுச்சு ,ஒரு பெரிய இரும்பு வேட்டை காரன் வச்சிருந்த வலைல அந்த நரியோட வால் மாட்டிக்கிச்சு

வாலில்லா நரி |The Fox without a Tail

வலில துடிச்ச அந்த நரி அந்த வளைய விட்டு தப்பிக்க முயற்சி செஞ்சுச்சு ,எவ்வளவு முயற்சி செஞ்சும் அதோட வால விடுவிக்க முடியல

ரொம்ப நேரத்துக்கு அப்புறமா கஷ்ட பட்டு இழுத்தப்ப அதோட வால் மட்டும் தனியா போயிடுச்சு

வாலில்லா நரி |The Fox without a Tail

அடடா வால் இல்லாம நம்ம கூட்டத்துல எப்படி பொய் சேருறதுன்னு யோசிச்சுச்சு அந்த நரி

தன்னோட கூட்டத்துக்கு போன அந்த நரி ஒரு தந்திரம் பன்னுச்சு ,தான் மட்டும் வால் இல்லாம இருந்தா எல்லா மிருகங்களும் சிரிக்கும் அதனால.எல்லா நரிகளையும் வால் இல்லாம செஞ்சிடணும்னு முடிவு பன்னுச்சு

வாலில்லா நரி |The Fox without a Tail

உடனே நண்பர்களே நமக்கு கடவுள் பாக்குறதுக்கு கண்ணையும் ,சாப்பிட வாயையும் ,கேக்குறதுக்கு வாயையும் கொடுத்திருக்காரு

ஆனா இந்த வாழ் எதுக்குன்னு யாருக்காச்சும் தெரியுமான்னு கேட்டுச்சு ,அதுக்கு எல்லா நரியும் விடை தெரியாம முழிச்சுச்சுங்க

அப்பத்தான் இந்த வாலில்லா நரி சொல்லுச்சு ,நமக்கு இந்த வாழ் எந்த பயனையும் தராததாலதான் என்னோட வால வெட்டிக்கிட்டேன்

வாலில்லா நரி |The Fox without a Tail

இப்ப எனக்கு ரொம்ப வேகம் வந்துடுச்சு ,வேகமா ஓடுற முயல கூட என்னால விரட்டி பிடிக்க முடியும் அதனால நீங்களும் உங்க வால வெட்டிக்கோங்கனு சொல்லுச்சு

அந்த நரியோட பேச்ச கேட்ட அந்த நரி கூட்டத்துல ஒரே குழப்பம் உண்டாச்சு ,அப்பத்தான் புத்திசாலியான நரி ஒன்னு கேட்டுச்சு

வாலில்லா நரி |The Fox without a Tail

ஆமா நீ ஒன்னோட வால எப்படி வெட்டுன அந்த வால் எங்கன்னு கேட்டுச்சு ,திடீர்னு இந்த கேள்விய கேட்டதும் வாலில்லா நரிக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சது

அப்ப எல்லா நரியும் சேர்ந்து சொல்லுச்சுங்க அட அயோக்கிய நரியே ,எங்கயோ வெட்டுப்பட்ட உன் வால நீயே வெட்டிகிட்டதா சொல்லி எங்கள ஏமாத்த பாத்ததும் இல்லாம ,எங்களையும் வால வெட்டிக்கவா சொல்லுறான்னு ரொம்ப கோபப்பட்டுச்சுங்க ,

வாலில்லா நரி |The Fox without a Tail

தன்னோட குட்டு வெளிப்பட்டத நினச்சு அசிங்க பட்ட அந்த நரி அந்த கூட்டத்த விட்டே ஓடிடுச்சு