Mulla ond the ledge – கீழே விழுந்த கழுதை முல்லா கதை :-முல்லா எப்பவும் கடவுள் நம்பிக்கை இருக்கிறவராவே இருந்தாரு கடவுளை புரிந்துகொண்டு கடவுள் கிட்ட கேட்க வேண்டியது மட்டும் கேட்பாரும் முல்லா

கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு அது கிடைக்கலைன்னு வருத்தப்பட்டுக்கிட்டே கிடக்கிறவங்க மாதிரி இல்லாம ,முல்லா எப்பவும் தனக்கு வேண்டிய கடவுள் கிட்ட கேட்பாரு அப்படி கிடைக்கலைன்னா அதுக்காக உட்கார்ந்து வருத்தப்பட மாட்டாரு கடவுளுக்கு இதுல இஷ்டம் இல்லை போல அப்படின்னு மனச தேத்திக்கிட்டு அடுத்த வேலையை செய்ய போயிருவாரு முல்லா

இந்த பழக்கம் முல்லாவுக்கு நிறைய மன நிம்மதியை கொடுத்துச்சு ஒரு நாள் முல்லா மலை மேலே இருக்கிற ஒரு ஊருக்கு போயி அங்க நடக்குற சந்தையில வியாபாரம் பார்த்து பணம் சம்பாதிப்பதற்காக போனாரு அங்க போறதுக்கு தன்னோட கழுதை மேல நிறைய பொதிகளை ஏத்திக்கிட்டு நடந்து போனாரு முல்லா

முதல் நாள் பெஞ்சு மழையில அந்த மலைப்பாதை முழுசும் ரொம்ப செகதியா இருந்துச்சு அடடா இதுல பார்த்து நடக்காட்டி வலிக்கு கீழே விழுந்துருவோமேன்னு யோசிச்ச முல்லா தன்னோட கழுதையை கூப்பிட்டு மெதுவாக நடந்து போனாரு

அப்பத்தான் முல்லா கூட வந்த கழுத வலிக்கி மலையோட விளிம்புல இருந்து கீழ விழுக பார்த்துச்சு முல்லா எவ்வளவோ முயற்சி பண்ணி தன்னோட கழுதையை பிடித்து பாதையில நிப்பாட்ட பார்த்தாரு அப்பதான் முல்லா கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டாரு கடவுளே எனக்கு என்னோட கழுதை காப்பாற்றிக் கொடு நான் நூறு ரூபா அன்னதானம் செய்யுறேன்னு வாய் விட்டு சத்தமா சொன்னாரு

அடுத்த நொடி விளிம்புல தொங்கிக்கிட்டு இருந்த கழுதை அங்கே இருக்கிற ஒரு மரத்து கிளையில் மாட்டிக்கிட்டு நின்னுச்சு அடடா கடவுள் நமக்கு உதவறாரு போல கண்டிப்பா அந்த 100 ரூபாய அன்னதானம் செஞ்சிடனும்னு நெனச்ச முல்லா கீழ எட்டி பார்த்தாரு

அப்பத்தான் மரத்து கிளை முறிய ஆரம்பிச்சுச்சு கழுதை கண்டிப்பா கீழே விழுந்துரும்னு முல்லா புரிச்சிக்கிட்டாரு , உடனே கடவுளே உனக்கு நான் 200 ரூபாய் அன்னதானம் செய்யுறேன் என் கழுதையை அந்த மரத்து மேல இருந்து காப்பாத்து அப்படின்னு சொன்னாரு

அவர் சொன்ன அடுத்த நிமிஷம் கழுத மாட்டி இருந்த கிளை உடைஞ்சு அந்த மரத்துலருந்து கீழே விழுந்து கால ஒடச்சுடுச்சு அதை பார்த்த முல்லா சொன்னாரு இந்த கடவுள் ரொம்ப கராரான பேர்வழியா இருப்பாரு போல இருக்கு, அவருக்காக நான் அன்னதானம் செய்கிறேன் என்று சொன்ன காசைவிட நிறைய எதிர்பார்க்கிறார் போல அதனாலதான் என் கழுதை கீழே விழுந்துடுச்சு அப்படின்னு நெனச்சுக்கிட்டு மனச தேத்திகிட்டு கழுதையை கூப்பிட்டு ஆஸ்பத்திரி போய் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டாரு

முழுவதுமாக கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு தாங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் இருக்கிறதோ தப்பா போன வேலையை திருத்திக்கிறாகவும் இருக்கிறதோ ரொம்ப தப்புங்கிறதை உணர்த்துவதற்காக இந்த கதையை எழுதி இருக்காங்க போல
