Mulla on the Roof – மாடியில் முல்லா -நகைச்சுவை கதை :- முல்லா எல்லாரையும் முட்டாளாக்கிட்டு இருந்தாலும் ,முல்லாவே முட்டாலான சம்பவம் நிறய இருக்கு ஆனா அதையும் தாண்டி தன்னை முட்டாளாக்கினவங்களுக்கு பதில் அடி கொடுக்காம இருந்ததே இல்ல முல்லா

ஒருநாள் தன்னோட கழுதையை இழுத்துகிட்டு தோட்டத்துக்கு நடந்து போய்கிட்டு இருந்தாரு முல்லா அப்பத்தான் முல்லாவோட பணக்காரர் வீட்ட பார்த்தாரு முல்லா ,அந்த பணக்காரர் ஏற்கனவே முல்லா கிட்ட வம்பிழுத்து அசிங்க பட்டவர்தான்

அந்த பணக்காரர் திருப்பி முல்லாவ முட்டாளாக்கணும்னு காத்துகிட்டு இருந்தாரு ,முல்லா அந்த வீட்ட கடக்குறப்ப முல்லா முல்லானு யாரோ கூப்பிடுறாங்கலேனு திரும்பி பார்த்தாரு ,ஆனா அவருக்கு யாருமே தெரியல,அப்பத்தான் அந்த பணக்காரர் தன்னோட வீட்டு மூணாவது மாடி மொட்டை மாடியில இருந்து கூப்பிடுறத பார்த்தாரு

உடனே முல்லாவும் என்ன வேணும் எதுக்கு என்ன கூப்புட்டீங்கனு சத்தமா கத்தி கேட்டாரு , அதுக்கு அந்த பணக்காரர் முல்லா ஒரு நிமிஷம் மாடிக்கு வாங்களேன் ,உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு சொன்னாரு

இத கேட்ட முல்லா ஐயா நண்பரே எனக்கு தீராத மூட்டு வலி இருக்கு ,என்னால மூணு மாடி ஏறி எல்லாம் வர முடியாது ,என்ன வேணும்னு சொல்லுங்க ,அதுக்கு அந்த பணக்காரர் ஏன் என்ன பார்த்து பயமா ,சும்மா வாங்க உங்கள நான் ஒன்னும் செய்ய மாட்டேன் ,நீங்களே புத்திசாலின்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரிங்கனு வம்பிழுக்குற மாதிரி பேசுனாரு

உடனே இத புரிஞ்சிகிட்ட முல்லா மெதுவா படி ஏறி மூணாவது மாடிக்கு போனாரு ,மூணு மாடி ஏறி வந்த முல்லாவ உக்கார கூட சொல்லாம எனக்கு பத்து ரூபா பணம் வேணும் கொடுங்கன்னு கேட்டாரு ,அதுக்கு முல்லா நீங்கதான் பெரிய பணக்காரர் ஆச்சே உங்களுக்கு எதுக்கு பத்து ரூபா நான் கொடுக்கணும்னு கேட்டாரு

இல்ல நீங்க எவ்வளவு பெரிய கஞ்சனு தெரியாம கேட்டுட்டேன் நீங்க போங்கன்னு சொன்னாரு ,அப்பதான் முல்லாவுக்கு புரிஞ்சது தன்னை முட்டாளாக்கி மூணு மாடி ஏற வச்சு ,ஊருல எல்லாம் நான் முல்லாவ முட்டாளாக்கிட்டேன்னு சொல்லி தம்பட்டம் அடிக்கத்தான் இப்படி பண்ணுனாருனு புரிஞ்சிக்கிட்டாரு

உடனே முல்லா இந்த ஆள விடக்கூடாதுனு முடிவு செஞ்சுட்டு மெதுவா படியில் இறங்கி தன்னோட கழுத்தைகிட்ட வந்தாரு ,கழுதை முதுகுல இருந்த பையில எதையோ தேடுன முல்லா ,மாடியில இருந்த பணக்காரர பார்த்து ,ஐயா பணக்காரரே இந்தாங்க நீங்க கேட்ட பத்து ரூபா ,கீழ வந்து வாங்கிக்கோங்கன்னு சத்தமா கத்தி சொன்னாரு

அப்ப பக்கத்துல இருந்த எல்லாரும் ,யோவ் முல்லா அவரே பெரிய பணக்காரர் அவரு எதுக்கு உன்கிட்ட பத்து ரூபா கேக்கணும்னு கேட்டாங்க ,ஒரு வேலை தன்னோட பணத்தை செல்வலிக்காம இருக்குற காஞ்சனா அந்த ஆள் மாறிட்டாரு போலன்னு சொன்னாரு முல்லா

இத எல்லாம் மாடியில இருந்து கேட்ட அந்த பணக்காரர் ,இந்த முல்லா நம்ம மானத்தை வாங்கிகிட்டு இருக்காரே ,இப்ப நாம படியில இறங்கி போகலைனா இன்னும் நிறய பேசுவாரு ,இந்த ஊரே நம்மள கேவலமா பேச போகுதுனு நினைச்ச அந்த பணக்காரர் மெதுவா படியில இறங்கி வந்தாரு

முல்லா கிட்ட அவரு வந்ததும் ,என்ன பணக்காரரே பத்து ரூபாய்க்கு இப்படி மூணு மாடி இறங்கி வர்றீங்களே ,யாரோ கஞ்சன் ஒருத்தன் இருக்கானு நீங்க சொன்னீங்களே அவரு கிட்ட பணம் வாங்கி தான் சாப்பாடு சாப்பிட போறீங்களானு கேட்டாரு

அப்பதான் அங்க இருந்த எல்லாருக்கும் புரிஞ்சது ,முல்லாவ அலைக்கழிக்க மூணு மாடி ஏற வச்ச பணக்காரர் இப்ப மூணு மாடி இறங்கி வந்து அசிங்க படுறாரு இது தேவையில்லாத வேலை ,முல்லா கிட்ட திரும்ப தோத்துட்டாரு இந்த பணக்காரருனு சொல்லி சிரிச்சாங்க
