Mulla Gets A Gift From God – கடவுள் கொடுத்த தங்க காசு ,முல்லா கதை :-முல்லாவுக்கு எப்பவும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு அதனாலவே அடிக்கடி கடவுளை நினைச்சுக்குவாரு கடவுளை பத்தி பேசுவாரு முல்லா

ஒரு தடவை முல்லாவும் அவருடைய நண்பரும் காட்டு வழியா பயணம் போனாங்க அப்படி போகுறப்ப முல்லாவோட நண்பரும் முல்லாவும் பயண களைப்பு தெரியாம இருக்க பேசிக்கொண்டே போனாங்க

அப்பத்தா முல்லாவோட நண்பர் கடவுளை பத்தி பேச ஆரம்பிச்சாரு முல்லா உங்களுக்கு அதிகமா கடவுள் நம்பிக்கை இருக்கு நீங்க கடவுளை எப்படி பார்க்கிறீங்க அப்படின்னு கேட்டாரு அதுக்கு முல்லா சொன்னாரு நான் கடவுளை நண்பனா தான் பார்க்கிறேன் எனக்கு தேவையானதை அவர்கிட்ட கேட்கிறேன் , நண்பர்க கிட்ட கடன் கேட்கிற மாதிரிதான் அவர்கிட்ட வேண்டிக்குவேண் ,கடன் கிடைக்கட்டியும் நண்பனாவே இருக்குற நல்ல நண்பன் மாதிரியே நானும் இருக்கேன் அப்படின்னு சொன்னாரு

அதுக்கு அந்த நண்பர் சொன்னாரு கடவுள கடவுளா நினைச்சு வேண்டுனா தான் உங்க வேண்டுதல் பலிக்கும் கடவுள நண்பரா நெனச்சு வேண்டிங்கன்னா உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது அப்படின்னு சொன்னாரு அதுக்கு முல்லா நீங்க எப்படி வேணும்னாலும் கடவுளை வேண்டிக்கோங்க ஆனா நான் கடவுளை நண்ம்பரா தான் பாவிச்சு இதுவரைக்கும் நடந்துகிட்டு வர்றேன் அப்படின்னு சொன்னாரு

அப்பா அந்த நண்பர் சொன்னாரு எங்க எனக்காக கடவுள் நண்பர் கிட்ட ஏதாவது ஒரு வேண்டுதல் செய்யுங்க அது கிடைச்சுச்சுன்னா சொன்னா நானும் உங்கள மாதிரியே கடவுளை நண்பனா பாவிச்சு வேண்டுதல்களை செய்கிறேன் அப்படின்னு சொன்னாரு

அப்பத்தா முல்லா சொன்னாரு கடவுளே நண்பரே எனக்கு நூறு தங்க காசுகள் வேணும் இத நான் உங்கள நண்பனா நினைச்சு கேட்கிறேன் அதுக்கு குறைந்து ஏதாவது கொடுத்தேனா எனக்கு வேணாம் எனக்கு சரியா 100 தங்க காசு வேணும் இல்லைனா அதுக்கு மேல வேணும் அப்படின்னு கேட்டாரு

உங்க நண்பர ரொம்பத்தான் நம்புறீங்க போங்க அப்படின்னு நகைச்சுவையா சொல்லிட்டு ரெண்டு பேரும் மெதுவா நடக்க ஆரம்பிச்சாங்க அப்பத்தான் அந்தப் பாதையில ஒரு தோல்பை கிடக்கிறத பார்த்தாங்க உடனே முல்லா ஓடிப் போய் அதை எடுத்தாரு

அந்தப் பைக்குள்ள என்ன இருக்குன்னு ரெண்டு பேரும் ஆவலா பிரிச்சு பார்த்தாங்க அதுக்குள்ள நிறைய தங்க காசுகள் இருந்துச்சு உடனே முல்லா சொன்னாரு பாத்தீங்களா என்னோட நண்பர் என்னோட வேண்டுதலை கேட்டு எனக்கு தங்கக்காசு கொடுத்துட்டாரு அப்படின்னு சொன்னாரு

உடனே முல்லாவோட நண்பர் அந்த தங்க காசுகளை எண்ணி பார்த்தாரு அதுல 90 தங்கக் காசுகள் மட்டுமே இருந்துச்சு உடனே முல்லாவோட நண்பர் சொன்னாரு நீங்க நூறு தங்க காசு கேட்டீங்க உங்க நண்பர் 90 தங்கக்காசு தான் கொடுத்து இருக்காரு,

நூறு தங்க காசு கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு அது வேணாம்னு உங்க நண்பர் ஆன கடவுள் கிட்ட சொன்னீங்க இப்ப இந்த 90 தங்கக்காசு உங்க நண்பர் எனக்கு கொடுத்திருக்கிறார் போல அப்படின்னு சொன்னாரு

அதுக்கு முல்லா சொன்னாரு உங்கள மாதிரியே என்னோட கடவுள் நண்பரும் என்கிட்ட அடிக்கடி கடன் சொல்லுவாரு பத்து ரூபா கேட்டா அஞ்சு ரூபா குடுத்துட்டு மீதிய மறுநாள் கொடுப்பாரு அது மாதிரி தான் நான் நூறு தங்க காசுகள் கேட்டேன் இப்பொழுது 90 கொடுத்திருக்கிறார். மீதியு நாளைக்கு தருவாரு அதனால இந்த 90 தங்கக்காசும் எனக்கு தான் சொல்லிட்டு அந்தப் பைய பிடுங்கி கிட்டு நடக்க ஆரம்பிச்சாரு முல்லா
