Begum is Outwitted – ஏமாந்த மஹாராணி பேகம்-Birbal Stories in Tamil

Begum is Outwitted – ஏமாந்த மஹாராணி பேகம்-Birbal Stories in Tamil:-அக்பர் அரசவையில பீர்பால் ரொம்ப புகழோட இருந்தாரு ,அவரோட புகழ் உலகம் முழுசும் பரவுச்சு

அந்த காலத்துல அக்பரோட அரசவையில இடம் பிடிக்கிறதே பெரிய பாக்கியமா இருந்துச்சு

அக்பரோட மனைவியான மஹாராணி பேகம்க்கு தன்னோட தம்பியான ஷேர்கான பீர்பாலோட இடத்துல வைக்கணும்னு ஆச

இத பத்தி அரசர்கிட்ட பேசி சண்ட போட்டாங்க,என்னால பீர்பால ஒரு காரணமும் இல்லாம வெளியில அனுப்ப முடியாது

அக்பரே வெளியில போனாதான் உண்டுனு சொன்னாரு ,உடனே அப்ப நம்ம ரெண்டு பேரும் ஒரு நாடகமாடி பீர்பால வெளிய அனுப்பலாம் ,எனக்கு உதவி பண்ணுங்கன்னு சொன்னாங்க பேகம்

அக்பரும் அதுக்கு ஒத்துக்கிட்டாரு ,நமக்குள்ள சண்டை இருக்குற மாதிரியே நடிங்க ,பீர்பால் வந்ததும் மஹாராணி எங்கிட்ட மன்னிப்பு கேக்கலைனா நீங்க இனிமே அரண்மனைக்கு வர வேணாம்னு சொல்லிடுங்க சொன்னாங்க ,நான் எப்படியும் உங்ககிட்ட மன்னிப்பே கேக்க மாட்டேன் ,பீர்பால் தன்னோட பதவிய விட்டு போய்டுவாருனு சொன்னாங்க

பீர்பாலோட மதி நுட்பத்தை தெரிஞ்சி வச்சிருந்த அக்பர் ,பீர்பால் எப்படியும் ஜெயிச்சிடுவாருனு தெரிஞ்சும் மகாராணிய சமாதான படுத்த அந்த நாடகத்துக்கு சரினு சொன்னாரு

அப்ப பீர்பால் அங்க வந்தாரு ,பீர்பால் இங்க வாங்க மஹாராணிக்கும் எனக்கும் எப்பயும் சண்டையா இருக்கு இந்த நாட்டுக்கும் ,அரசருக்கும் நல்லது செய்றதுக்கு தான் நீங்க இருக்கீங்க ,

மஹாராணி என்கிட்ட மன்னிப்பு கேக்கணும் இல்லைனா உங்க வேலைய விட்டுடுங்கனு சொன்னாரு

இத கேட்ட பீர்பால் ,மஹாராணி பேகத்தை பாத்தாரு ,அவுங்க ரொம்ப கோபமா உக்காந்து இருந்தாங்க ,மஹாராஜா வேற இடத்துக்கு போய்ட்டாரு

அந்த அறைய விட்டு வெளிய வந்த பீர்பால் ஒரு காவலாளிகிட்ட ரகசியமா ஒரு விஷயம் சொன்னாரு

சொல்லிட்டு திரும்பி போயி எதுவுமே நடக்காத மாதிரி மஹாராணிய சமாதான படுத்த ஆரம்பிச்சாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அங்க வந்த காவலன் சொன்னாரு ,பீர்பால் அவர்களே அடுத்த மஹாராணிக்கு அறை தயார் செய்ய சொல்லி அரசர் உங்க கிட்ட சொல்ல சொன்னாருன்னு சொன்னான்

இத கேட்ட மஹாராணி பேகத்துக்கு தூக்கி வாரி போட்டுச்சு ,அடடா இது என்ன அரசர் என்னை விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ண போறாரா

பீர்பால மாத்த சொன்னதுனால அரசர் கோபிச்சுகிட்டாரோன்னு ரொம்ப பயந்தாங்க

உடனே அரசர் இருந்த இடத்துக்கு ஓடி போயி ,அரசரோட கால்ல விழுந்து அழுதாங்க ,தன்ன மன்னிச்சிட சொல்லி கெஞ்சுனாங்க

அப்பத்தான் அரசருக்கு புரிஞ்சது பீர்பால் ஏதோ தந்திரம் செஞ்சு ஜெயிச்சிட்டாருனு

அப்ப அங்க வந்த பீர்பால் கிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னாரு அக்பர் ,உடனே மஹாராணி பேகம் உலக அளவுல புகழடைஞ்ச பீர்பாலை ஜெயிக்க யாராலயும் முடியாதுனு ஒத்துக்கிட்டு அவர்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க