யார் பசு ,Akbar Birbal Story in Tamil

யார் பசு ,Akbar Birbal Story in Tamil:-அக்பரோட அரவசவையில ஒரு வழக்கு வந்துச்சு ,ரெண்டு விவசாயிங்க வந்து இது எங்களோட பசுன்னு சொல்லி ஒரே பசுவ காமிச்சு சொன்னாங்க

வழக்கம்போல இத பீர்பால விசாரிக்க சொன்னாரு அக்பர் ,

அந்த பசுவோட பேரு என்னனு ரெண்டு பேர்கிட்டயும் கேட்டாரு ,ரெண்டு பேரும் பத்மானு சொன்னாங்க

பீர்பாலுக்கு ஒரே குழப்பமா போச்சு ,உடனே ரெண்டு பேரையும் அந்த மாட பேர சொல்லி கூப்பிட சொன்னாரு

அந்த பசு சரியான உரிமையாளர் கிட்ட போயி நின்னுச்சு,இருந்தாலும் அந்த இன்னொரு விவசாயி அது தன்னோட பசுன்னு சொல்லி கிட்டே இருந்தாரு

உடனே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்த பீர்பால் இந்த மாட்ட ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மாசம் வச்சிருங்க ஒரு மாசம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தரும் அந்த மாட்ட கொண்டுவந்து தன்கிட்ட காமிக்கணும்னு சொன்னாரு

உடனே ஒரு விவசாயி கிட்ட அந்த பசுவ அனுப்பிச்சாரு பீர்பால் ,ஒரு மாசம் கழிச்சி அந்த பசுவ கொண்டுவந்து பீர்பால் கிட்ட காமிச்சாரு ஒரு விவசாயி அந்த பசு ஒரு மாற்றமும் இல்லம வந்து நின்னுச்சு

அடுத்த விவசாயி கிட்ட கொடுத்து அனுப்புச்சாறு அந்த பசுவ , ஒரு மாசம் கழிச்சு வந்த பசு ஒண்ணுமே சாப்பிடம ஒல்லியா வந்து நின்னுச்சு ,இத பாத்த பீர்பாலுக்கு புரிஞ்சுபோச்சு

இந்த பசு தன்னோட சரியான உரிமையாளர் கிட்ட நல்லா சாப்பிட்டு திடகாத்திரமா இருந்துச்சு ,ஆனா இந்த ரெண்டாவது விவசாயி கிட்ட போனதும் சரியா சாப்பிடாம இப்படி ஆகிடுச்சுனு புரிஞ்சிக்கிட்டாரு

அந்த ரெண்டாவது விவசாயிய காவலர்கிட்ட ஒப்படைச்சிட்டு ,அந்த பசுவ அந்த முதல் விவசாயி கிட்ட ஒப்படைச்சாரு பீர்பால்