Elephant rope story in tamil யானையும் சின்ன கயிறும் :- ராமு ஒரு தன்னம்பிக்கை அற்ற பையன்
ராமுவை அவனது தாத்தா ஒருநாள் மிருக காட்சி சாலைக்கு அழைத்து சென்றார் அங்கு நிறய யானைகள் இருக்குறத பாத்தான்

எல்லா யானைகளும் சின்ன கயிறுல கட்டி போட்டிருக்குறத பாத்தான்
உடனே அங்க இருந்த காவலாளிகிட்ட அது என் பலம் வாய்ந்த யானையை இந்த சின்ன கயிறால கட்டி போட்டிருக்கீங்க
இது சங்கிலி யில காட்டினாலே அறுத்துகிட்டு ஓடுற பலம் கொண்ட யானை ஆச்சே இது எப்படி இங்கயே இருக்குன்னு வரிசையா பல கேள்விகள் கேட்டான்

இத கேட்ட அந்த காவலாளி இந்த யானையை சின்ன வயசுல இருந்து இந்த மாதிரி சின்ன கயிறாலத்தான் கட்டி போடுறோம்
அந்த சின்ன வயசுல இந்த கயிறை அருக்குற சக்தி குட்டி யானைக்கு கிடையாது
ஆனா எதையும் மறக்காத மனிதர்கள் போலவே இந்த சின்ன விசயத்த யானை மறைக்கிறது இல்ல

தன்னோட சக்தி பலமடங்கு அதிகரிச்சும் பலச நினச்சு வறுத்த படுற மனிதர்கள் போலவே யானையும் தன்னோட சக்தி என்னனு தெரியாமலே வாழ்ந்துகிட்டு இருக்கு

இத கேட்ட ராமுக்கு அப்பதான் ஓரச்சத்து அடடா நாமும் இந்த யானை போலவே நம்முடைய பலத்த மறந்து வறுத்த பட்டுக்கிட்டு இருக்கமேனு சொல்லி வறுத்த பட்டான்