Site icon தமிழ் குழந்தை கதைகள்

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள் – Thenali Raman Tamil Story -1

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள் – Thenali Raman Tamil Story -1:-உலகமகா புத்திசாலியான தெனாலிராமன் ஒருநாள் அரண்மனைல தன்னோட வேலை எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு தன்னுடைய வீட்டுக்கு கால்நடையா நடந்து போனாரு

நாட்டுல இப்ப நிறைய திருட்டு நடக்கிறத அரண்மனை காவலர்கள் சொன்னது அப்ப அவருக்கு ஞாபகம் வந்துச்சு தன்னோட வீட்ட நெருங்குணப்பத்தான் தேனிலராமன் கவனிச்சாரு நாலு அஞ்சு திருடர்கள் தன்னோட வீட்டை நோட்டமிட்டு கிட்டு இருக்கிறத

இத பார்த்த தெனாலிராமனுக்கு திடுக்கினாயிடுச்சு அடடா கடைசியா அரண்மனையில வேலை செய்ற தன்னோட வீட்டுக்கே இந்த திருடர்கள் வந்துட்டாங்களே இவங்களுக்கு என்ன தைரியம் காவலர்களை கூப்பிட்டு இவங்கள பிடிச்சு கொடுத்திடலாமா அப்படின்னு யோசிச்சாரு தெனாலிராமன்

அப்பத்தான் அவரோட புத்திக்கு ஒரு யோசனை வந்துச்சு திருடங்களை கண்டுக்காத மாதிரி மெதுவா நடந்து தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலிராமன் தன்னோட மனைவி கிட்ட திருட்டு கும்பல் வெளியில இருக்கிறத காதோட காது வச்சு ரகசியமா சொன்னாரு

உடனே தெனாலிராமன் மனைவி ரொம்ப பயந்து போயிட்டாங்க அடடா என்ன இப்படி சொல்றீங்க நம்ம வீட்டுக்கு திருடர் கூட்டம் வந்திருக்காங்க வேகமாக காவல் அதிகாரிக்கு தகவல் சொல்லி விடுங்க அப்படின்னு சொன்னாங்க அப்பத்தான் தெனாலிராமன் சொன்னாரு நீ கொஞ்சம் அமைதியா இரு நானே அவங்களுக்கு இன்னைக்கு ஒரு பாடம் சொல்லி கொடுக்க போறேன் அப்படின்னு சொன்னாரு தெனாலிராமன்

இப்பதான் தெனாலிராமன் சத்தமா பேச ஆரம்பிச்சாரு என்னப்பா வீட்டுக் கதவை திறந்து வச்சிருக்க நாடு எல்லாம் திருட்டு பயமா இருக்கு நம்ம வேற அரசர் கொடுத்த பொண்ணு பொருளை எல்லாம் பாதுகாக்க வேண்டிய நிலைமையில் இருக்கோம் அப்படின்னு சொன்னாரு இது தெளிவா வெளியில் இருந்த திருடர்களுக்கு கேட்டுச்சு

தெனாலிராமன் தொடர்ந்து சொன்னாரு நம்ம கிட்ட இருக்கிற விலை உயர்ந்த பரிசுகள் என்ன அரசர் கொடுத்தது அதை நம்ம பாதுகாப்பா வச்சிருக்கணும் திருட்டுப் போய்விடக்கூடாது அதனால ஒரு பெட்டியில எல்லாத்தையும் போட்டுக் கொண்டு வா அப்படின்னு சொன்னாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா வீட்டை விட்டு மெதுவா வெளியில் வந்த தெனாலிராமன் ஒரு பெட்டிய திருடுகர்கள் கண் படுற படி நேர வந்து தன்னோட கிணத்துக்குள்ள போட்டாரு நேரா வீட்டுக்குள்ள போன தெனாலிராமன் அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு நம்ம பெட்டியை கொண்டு வந்து நம்ம வீட்டு கிணத்துக்குள்ள போட்டுட்டேன்

இப்ப எந்த திருடனாளையும் நம்ம பெட்டிய திருட முடியாது அப்படின்னு சத்தமா பேசினாரு தொடர்ந்து நம்ம கிணத்துல நிறைய தண்ணி இருக்கு இதுக்குள்ள இறங்கி பணபெட்டிய திருடுவது ரொம்ப கஷ்டம் அப்படின்னு சத்தமா சொன்னாரு

தெனாலிராமன் சத்தமா பேசினது எல்லாமே திருடர்களோட காதுல கேட்டுச்சு அவங்களுக்கு எல்லாம் அடடா வீட்டை உடைத்து வீட்டுக்காரங்களை கட்டிப்போட்டு கஷ்டப்பட்டு இன்னைக்கு திருடத் தேவையில்லை இந்த ஆளு சுலபமா வெளியில கொண்டுவந்து கிணத்துல பெட்டியை போட்டுட்டாரு ,வாங்க யாராவது ஒருத்தர் கிணத்துக்குள்ள இறங்கி அந்த பெட்டியை எடுங்க அப்படின்னு சொன்னான் திருடர்களோட தலைவன்

ஆனா கிணத்துல தண்ணி அதிகமா இருந்ததினால அங்க இருந்த யாரும் உள்ள குதிக்க முன்வரல அப்பத்தான் திருடங்களோட தலைவன் சொன்னாரு இங்க பாத்தீங்களா நாலு வாலியும் கயிறும் இருக்கு இத வச்சு தண்ணிய பூரா கொஞ்சம் கொஞ்சமா இறைச்சு வெளியில ஊத்தி விட்டோனா தண்ணியோட அளவு கொறஞ்சிடும் நம்ம சுலபமா அந்த பணப்பெட்டியை எடுத்துடலாம் அப்படின்னு சொன்னான்

உடனே எல்லா திருடர்களும் கொஞ்சம் கொஞ்சமா தண்ணி இறைச்சி வெளியில ஊத்த ஆரம்பிச்சாங்க அந்த தண்ணி எல்லாம் தெனாலிராமன் வீட்டுக்கு பின்னாடி இருந்த தோட்டத்துக்கு போச்சு இதை ஜன்னல் ஓட்டை வழியா பார்த்துகிட்டே இருந்தாரு தெனாலிராமனும் தெனாலிராமனோட மனைவியும் பார்த்தியா என்னோட திறமையினால இன்னைக்கு தோட்டத்துக்கு தண்ணி பாச்சுர வேலையை இந்த திருடர்கள் செய்றாங்க அப்படின்னு சொல்லி சிரிச்சாரு அதே நேரத்துல தன்னோட மனைவிய பின் வாசல் வழியாக காவலர்களுக்கு தகவல் சொல்லி விடவும் அனுப்பிச்சு விட்டார்

அவுங்க மெதுவா பக்கத்து வீட்டு காரர எழுப்பி நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி அரண்மனை காவலர்களை கூட்டிட்டு வர சொன்னாங்க ,உடனே அந்த பக்கத்து வீட்டுக்காரரும் வேகமாக அரண்மனைக்கு போயி விஷத்தை சொன்னாரு ,உடனே காவல் தலைவர் 100 காவலர்களோட தெனாலிராமன் வீட்ட சுத்தி வளச்சுட்டாரு

சரியா விடிய போற நேரத்துல காவலர்கள் தெனாலிராமன் வீட்ட சுத்தி வளச்சாங்க ,சுலபமா கிணத்துல இருந்து பொண்ணு பொருள் இருக்குற பெட்டியை திருடிடலாம்னு நினைச்ச திருடர்கள் திடீர்னு வந்த அரண்மனை காவலர்கள பார்த்ததும் ரொம்ப பயந்து போய்ட்டாங்க ,உடனே காவலர் தலைவன் அந்த திருடர்கள் கூட்டத்த கட்டி இழுத்துட்டு போனாரு

தெனாலிராமன் புத்திசாலித்தனமா நடந்துக்கிட்ட விஷயம் ஊர் முழுவதும் பரவுச்சு , திருட வந்த இடத்துல இப்படி நம்மள விடிய விடிய தண்ணி அரைக்க விட்டுட்டாரே அப்படின்னு வருத்தப்பட்டாங்க அந்த திருடர்கள்

இந்த செய்தி அறிந்த அரசர் தெனாலிராமன் ஓட புத்திசாலித்தனத்தை போற்றி நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தார்


தெனாலி ராமன் ஒருநாள் அரண்மனை வேலை முடிஞ்ச பிறகு தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு

தன்னோட வீட்டுக்கு பக்கத்துல நாலு திருடங்க நின்னு தன்னோட வீட்டையே பாத்துகிட்டு இருக்கிரத பாத்தாரு

திருடங்க அவர பாக்குரதுக்கு முன்னாடி தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலி ராமன்

தன்னோட மனைவிகிட்ட ரகசியமா திருடங்க வந்திருக்கிறத சொன்னாரு தெனாலிராமன்

நீ சத்தம் போடாம நான் சொல்ரதுக்கு ஏத்தமாதிரி நீ பேசுனா போதும்னு சொன்னாரு

உடனே வெளியில் இருக்குர திருடன்களுக்கு கேக்ககுர மாதிரி சத்தமா பேச ஆரம்பிச்சாரு தெனாலி ராமன்

நம்ம நாட்ல இப்போ ரொம்ப திருட்டு நடக்குது அதனால நம்ம வீட்ல இருக்குற தங்க காசுங்க எல்ல பாத்தையும் ஒரு பெட்டியில் போட்டு எடுத்துட்டு வா

நாம அத நம்ம கிணத்துல போட்டுடுவோம் அப்பத்தான் நம்ம வீட்டுக்கு திருடன்கள் வந்தாக்கூட வீட்ல எதுவும் இல்லைனு தேடிப்பாத்துட்டு திரும்பி போயிடுவாங்கனு சொன்னாரு

உடனே ஒரு பெட்டிய எடுத்து அதுல சில கல்ல போட்டு தூக்கிகிட்டு போயி கிணத்துல போட்டாரு

திருடன்கள் தான் கிணத்துல பெட்டிய போடுரத பாக்குராக்களான்னு ஓரக்கான்னால பாத்தாரு

திருடன்கள் தெனாலி ராமன் செய்யிரத பாத்தாங்க

நமக்கு வேலை சுலபம் வீட்ட உடைச்சு திருட வேண்டிய வேலையே இல்லை

கிணத்துல இருக்குற இந்த தங்கத்த எடுத்தம்னாலே போதும்னு அவுங்களக்குள்ள சொல்லிகிட்டு

தெனாலிராமன் வீட்டுக்கு போரவரைக்கும் காத்திருந்தாங்க

இத பாத்த தெனாலிராமன் பாத்துப் பாக்காத மாதிரி வீட்டுக்குள்ள போயிட்டாரு

தெனாலிராமன் போனதுக்கு அப்புரமா அந்த திருடன்களோட தலைவன் மெதுவா கிணத்துகிட்ட வந்தான்

கிணத்துல நிறை தண்ணி இருக்கிறத பாத்த திருடன் நம்மள்ள யாரு உள்ள இறங்கி அந்த பெட்டிய

எடுக்குரதுன்னு கேட்டாரு

கிணத்துக்குள்ள குதிக்க யாருமே முன் வராததால அவனுக்கு ஒரு யோசன தோனுச்சு

இந்த கிணத்துதண்ணீர் எல்லாத்தையும் எறச்சி ஊத்திட்டம்னா நாம சுலபமா அந்த தங்கம் இருக்குற பெட்டிய எடுத்திடலாம்னு சொன்னாரு

உடனே ஒருத்தர் மாத்தி ஒருத்தரா அந்த கிணத்து தண்ணி இறைக்க ஆரம்பிச்சாங்க

தண்ணி கொஞ்சம் கொஞ்சமா வயல் வெளி முழுசும் நிறைஞ்சுச்சு

அனா கிணறு இறைக்க இறைக்க சுரந்துகிட்டே இருந்ததால் தண்ணியோட மட்டம் குறையவே

இல்லை

என்னதான் தண்ணி இறைச்சாலும் தண்ணியோட அளவு குறையவே இல்லைங்கிறத பாத்த திருடன்கள் ரொம்ப சோந்துபோயிட்டாங்க

விடியப்போகுத நாம இப்போ போயிட்டு நாளைக்கு வந்து தண்ணி இறைப்போம்னு சொன்னான்

வேணாம் வேணாம் இன்னும் ரெண்டுநாளைக்கு வயலுக்கு இந்த தண்ணி போதும்னு

நாளைமறுநாள் வந்து தண்ணி இறைச்சு ஊத்துநீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்னு மரத்துக்கு பின்னாடி இருந்து தெனாலிராமன் சொன்னாரு

தெனாலி ராமன் சத்தத்த கேட்டு திரும்பி பாத்தாங்க திருடன்கள்

அப்பதான் அவுங்க ஏமாத்தப்பட்டத அவுங்க புரிஞ்சுகிட்டாங்க

உடனே வேகமா காட்டுப்பகுதிக்குள்ள போயி ஒளிஞ்சுகிட்டாங்க

Exit mobile version