Site icon தமிழ் குழந்தை கதைகள்

ஓநாயும் குதிரையும் WOLF AND THE HORSE – Tamil Kids Story

ஓநாயும் குதிரையும் WOLF AND THE HORSE – Tamil Kids Story :- ஒரு காட்டு பகுதியில ஒரு குதிரை நடந்து போய்கிட்டு இருந்துச்சு

ரொம்ப தூரம் நடந்த குதிரைக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சுச்சு , அந்த பசியோட நடந்த அந்த குதிர ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு

உணவு தேடிகிட்டே நடந்த அந்த குதிரைய அங்க இருந்த ஒரு ஓநாய் பாத்துச்சு

அடடா இவ்வளவு பெரிய குதிர தனியா போகுதே ,இந்த குதிரைய நாம வேட்டையாடுனோம்னா நம்ம கூட்டத்துக்கே ஒரு வாரம் வேற உணவு தேவ இல்லையேனு நினைச்சி பாத்துச்சு

ஆனா இந்த குதிரை ரொம்ப பெருசா இருக்கே இத எப்படியாவது நம்ம கூட்டம் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போனா மட்டும்தான் எல்லோரும் சேந்து இந்த குதிரைய வேட்டையாடலாம் இல்லைனா இந்த குதிரை தப்பிச்சு போயிடும்னு தனக்குள்ள பேசிக்கிட்டே ஓநாய் குதிரை கிட்ட வந்தது

நண்பரே நீங்க ரொம்ப சோர்வா இருக்குற மாதிரி இருக்கு என்கூட வாங்க நான் வைக்கோல் நிறைய இருக்குற இடத்த கட்டுரேன்னு சொல்லுச்சு

புத்திசாலியான அந்த குதிரை லேசா சிரிச்சிகிட்டு

நீ என்ன வைக்கோல் திங்குற மிருகமா ? , உனக்கு எப்படி அந்த இடம் தெரியும் ? உனக்கு வைக்கோல் திங்கிற பழக்கம் இருந்தா கூட நீ எதுக்கு எனக்கு அத விட்டு கொடுக்கணும் ? இது மாதிரி நிறைய கேள்வி கேட்க ஆரம்பிச்சிச்சு குதிரை

திடீர்னு இந்த கேள்விகள சந்திச்ச ஓநாய்க்கு என்ன பண்றதுனு தெரியாம உளறுச்சு , தன்னோட திட்டம் எல்லாம் தோத்து போனத நினச்சு வெட்கப்படுச்சு ஓநாய்

உன்னோட வேலை எல்லாம் என்கிட்டே காட்டதன்னு சொல்லிட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சுச்சு குதிரை

குழந்தைகளை எப்போதும் துன்பத்தையே தர்றவங்க நல்லது செஞ்சாலும் அவுங்கள முழுமையா நம்ப கூடாது , அப்படி நம்பினீங்கன்னா இந்த குதிரமாதிரி தப்பிச்சி போகாம , ஓநாயோட சூழ்ச்சில மாட்டிக்குவீங்க

Exit mobile version