Site icon தமிழ் குழந்தை கதைகள்

Who will Bell the Cat – Kids Story – பூனைக்கு யார் மணி கட்டுவது

Who will Bell the Cat

Who will Bell the Cat – Kids Story – பூனைக்கு யார் மணி கட்டுவது :- ஓர் கிராமத்துல இருக்குற விவசாயியோட வீட்டுல நிறைய எலிங்க இருந்துச்சு

அவரு சேமிச்சு வச்சிருந்த தானியங்களை திங்கிறதுதான் அதுங்களோட ஒரே வேலை , இத பாத்து ரொம்ப கோபப்பட்டாரு அந்த விவசாயி

தான் பாடு பட்டு விவசாயம் செஞ்ச அந்த தானியங்களை இப்படி வெட்டியா எலிங்க திங்குறது அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கல

உடனே ஒரு பெரிய பூனையை வாங்கிட்டு வந்தாரு அந்த விவசாயி ,தன்னோட வீட்டுல இருக்குற எலிங்கள பிடிக்க அந்த பூனை உதவும்னு நினைச்சாரு

அந்த பூன வந்த நாள்ல இருந்து அங்க இருந்த எலிங்கள பிடிச்சி திங்க ஆரம்பிச்சது

பூனைக்கு பயந்த அந்த எலிக்கூட்டம் ஒரு முடிவு பண்ணுச்சுங்க , அந்த பூனைக்கு ஒரு மணிய கட்டி விட்டுட்டம்னா அது வர்றத நாம கண்டு பிடிச்சிடலாம்னு முடிவு பண்ணுச்சுங்க

ஆனா யார் தைரியமா அந்த பூனைக்கு மணி காட்டுவாங்கன்னு ஒரு கேள்வி வந்துச்சு

அப்ப தைரிய சாலியான ஒரு குட்டி எலி நான் காட்டுறேன்னு சொல்லி ஒரு மானிய எடுத்துட்டு அந்த புனைகிட்ட போச்சு

பூனையாரே பூனையாரே நீங்க வந்ததுல இருந்து இங்க இருந்த கேட்ட எலிங்க எல்லாம் ஓடிடுச்சு ,உங்களோட சேவையை பாராட்டி நல்ல எலிங்க எல்லாம் சேந்து ஒங்களுக்கு இந்த விலைமதிப்பில்லாத மணிய பரிசா தரோம்னு சொல்லி அந்த மணிய அதோட கழுத்துல கட்டுச்சு

அன்னைல இருந்து ஒரு எலிய கூட அந்த பூனையாள பிடிக்க முடியல ,அதனால அந்த பூனைய தொரத்தி விட்டுட்டாரு அந்த விவசாயி

முட்டாள் தனமா யார் என்ன கொடுத்தாலும் வாங்க கூடாது குழந்தைகளா

Exit mobile version