Site icon தமிழ் குழந்தை கதைகள்

True Wealth Tamil Kids Story – எது செல்வம் குழந்தைகள் சிறுகதை

True Wealth Tamil Kids Story – எது செல்வம் குழந்தைகள் சிறுகதை :- ஒரு ஊருல ஒரு பணக்காரர் இருந்தாரு அவருக்கு தார் பெருமை அதிகம்

ஊருல உள்ள எல்லாரும் தன்னோட பணத்தை பத்தி தம்பட்டம் அடிக்கிறதே வேலை

அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவனுக்கு தன்னோட பணத்தோட மதிப்பை காமிக்கணும்னு நினைச்சாரு

ஒரு நாள் அந்த மகன கூட்டிகிட்டு அந்த ஊரையே சுத்தி காமிச்சாரு

சாலையோர மக்கள் , அங்க இருக்குற குடிசைகள்ன்னு எல்லாத்தையும் கட்டுனாரு

மீண்டும் வீட்டுக்கு வந்ததும் பாத்தியா நாம எவ்வளவு பணக்கராங்கன்னு சொன்னாரு

அப்பத்தான் அந்த மகன் சொன்னாரு அப்பா நம்ம கிட்ட ஒரு நாய் குட்டிதான் இருக்கு ஆனா அவுங்க இட்ட கணக்கில் அடங்காத வீட்டு விலங்குகள் இருக்கு

நம்ம கிட்ட ஒரு பெரிய வீடு இருக்கலாம் ஆனா அவுங்க வீடு மிக பெரிய நிலத்துக்கு அடுத்து இருக்கு

மிக பெரிய விளக்குகள் நாம பயன்படுத்தலாம் ஆனா நிலவே அவுங்க வீட்டுக்கு வெளிச்சம் தருது

நம்ம சின்ன நீச்சல் குளம்தான் இருக்கு ,ஆனா அவுங்க கிட்ட வற்றாத நதியே இருக்கு

நாம எவ்வளவு ஏழ்மை நிலைல இருக்குறோம்னு காமிச்சதுக்கு ரொம்ப நன்றி அப்படின்னு சொன்னாரு

இதுக்கு ஒண்ணுமே பதில் சொல்ல முடியாம போனது அந்த பணக்காரரால

Exit mobile version