Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Strange House-வானத்தில் வீடு -அக்பர் பீர்பால் கதை

The Strange House-வானத்தில் வீடு -அக்பர் பீர்பால் கதை :-அக்பர் ஒருநாள் பீர்பால கூப்பிட்டு என்னோட பண்ணைல ஒரு வீடு கட்டணும் ,ஆனா அந்த வீடு தரைல கட்ட கூடாது உன்னால முடியுமான்னு கேட்டாரு

அதுக்கு நிறய பணமும் ,மூணுமாசம் அவகாசமும் வேணும்னு சொன்னாரு அக்பர் ,உடனே அக்பர் அவருக்கு ஆயிரம் தங்க நாணயங்களும் நேரமும் கொடுத்தாரு

வீட்டுக்கு போன பீர்பால் வேட்டை காரர்களை கூப்பிட்டு எனக்கு 100 பச்சை கிளிகள் வேணும் அத பிடிச்சிட்டு வாங்கனு சொன்னாரு

உடனே எல்லா வேட்டைக்காரர்களும் காட்டுக்கு போயி நிறய பச்ச கிளிகளை பிடிச்சிட்டு வந்தாங்க

அத எல்லாத்தயும் தன்னோட மகள் கிட்ட ஒப்படைச்ச பீர்பால் ,இந்த கிளிகளுக்கு எல்லாம் பேச சொல்லி கொடுக்க சொன்னாரு

கொஞ்ச நாள் கழிச்சி எல்லா கிளிகளும் பேச ஆரம்பிச்சது ,உடனே பீர்பால் கட்டடம் கட்டணும் ,கல்லு எடுத்துட்டு வாங்க ,மண்ண கொலைங்கனு கட்டடம் கட்டுறப்ப பேசுறத எல்லாம் சொல்லி கொடுக்க சொன்னாரு

மூணு மாசம் கழிச்சி வீடு கட்ட ஆரம்பிச்சாச்சு வந்து பாருங்கன்னு அக்பர பண்ணைக்கு கூட்டிட்டு போனாரு பீர்பால்

அங்க வந்து பார்த்தா நிறய கிளிங்க அங்க இருக்குறத பார்த்தாரு ,அதுங்க கட்டடம் கட்டணும் ,மண்ணை போடுங்க ,தண்ணி ஊத்துங்கனு பேசிக்கிட்டே இருந்துச்சுங்க

இத பார்த்த அக்பருக்கு ஆச்சர்யமா போச்சு ,இது என்ன பீர்பால் இந்த கிளிகளா எனக்கு வீடு கட்டி தர போகுது கேட்டாரு

அதுக்கு ஆமாம் அரசே காத்துல வீடுகட்ட ,காத்துல பறக்கிற பறவைகளால தான முடியும்னு சொன்னாரு

தன்னை பீர்பால தோக்கடிச்சிட்டருனு புரிஞ்சிக்கிட்டாரு அரசர்

Exit mobile version