Site icon தமிழ் குழந்தை கதைகள்

தவளையும் இளவரசியும் – The Princess Frog Tamil Story

The Princess Frog Tamil Story

தவளையும் இளவரசியும் – The Princess Frog Tamil Story :- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு ,அவருக்கு அழகான ஒரு இளவரசியும் இருந்தா,அவளுக்கு தான் ஒரு இளவரசின்ற கர்வம் அதிகமா இருந்துச்சு

எப்பவும் அடுத்தவங்கள ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டா அந்த இளவரசி

இளவரசியோட இந்த போக்க கண்டிச்சாறு அரசர் ,எப்போதும் அடுத்தவங்கள மதிக்கனும்னு இளவரசிக்கு அறிவுரை சொல்லிகிட்டே இருப்பாரு ,அரசரை ஒருநாள் இளவரசிக்கு ஒரு தங்க பந்த விளையாட கொடுத்தாரு அரசர்

அந்த தங்க பந்த எடுத்துக்குட்டு அரண்மனை தோட்டத்துல விளையாட போனா அந்த இளவரசி ,அப்ப எதிர்பாராத விதமா அந்த பந்து அங்க இருக்குற குளத்துக்குள்ள விழுந்துடுச்சு

தங்க பந்த தொலச்ச இளவரசி ரொம்ப வறுத்த பட்டா ,அப்ப அங்க ஒரு தவள வந்துச்சு ,அழகிய இளவரசியே நீ ஏன் அழுகுறேன்னு கேட்டுச்சு அந்த தவள

தன்னோட தங்க பந்த தொலச்ச கதையை சொன்ன இளவரசி ,அத எடுத்து கொடுக்க சொல்லி கேட்டா ,அதுக்கு அந்த தவள சொல்லுச்சு எனக்கு ஒரு ஆச இருக்கு என்ன உங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போயி 3 நாள் உன்னோட தட்டுல சாப்பாடு போட்டு என்னோட படுக்கையிலயே படுக்கணும்னு ,

அந்த ஆசைய நிறைவேத்துவியான்னு கேட்டுச்சு அந்த தவள ,தன்னோட பந்து கிடைச்சா போதும் இந்த தவளைய அதுக்கு அப்புறமா விட்டுட்டு ஓடிடலாம்னு நினச்சு சரின்னு சொன்னா அந்த இளவரசி

உடனே தண்ணிக்குள்ள குதிச்சி அந்த தவள அந்த தங்க பந்த எடுத்துட்டு வந்து கொடுத்துச்சு ,உடனே அந்த இளவரசி வேகமா அரண்மனைக்கு ஓடி போய்ட்டா

மறுநாள் அரசர்கூட உக்காந்து சாப்டுகிட்டு இருந்தா அந்த இளவரசி ,அப்ப அந்த தவள அங்க வந்துச்சு ,தான் ஏமாத்த பட்டத அரசருக்கு சொல்லி அழுதுச்சு தவள

நாம் அரச பரம்பரை நாம எப்பவும் சொன்ன சொல்ல எப்பவும் காப்பாத்தனும் ,என்ன சொன்னாலும் நீ செஞ்சது தப்பு அந்த தவளைக்கு செஞ்ச சத்தியத்த காப்பாத்துன்னு சொன்னாரு

அரசர் சொன்ன மாதிரியே அந்த தவளையை தன்னோட தட்டுலயே சாப்பிட வச்சா அந்த இளவரசி

அடுத்ததா இளவரசியோட படுக்கையிலேயே படுத்து தூங்குச்சு அந்த தவள , வெறுப்போட தன் தந்தை சொன்னத செஞ்சா அந்த இளவரசி

மூணு நாளைக்கு அப்புறமா காலைல எந்திருச்சு பாக்குறப்ப அந்த தவள ஒரு அழகிய இளவரசரா மாரி இருந்துச்சு

இளவரசியே என்னோட சாபத்துநாள இப்படி தவளயா இருந்தேன் ,நீ என்ன ஏமாத்துனாலும் என்ன காப்பாத்துனது நீயும் உங்க அப்பாவும் ,உன்னோட அப்பாவோட நேர்மைய நீயும் கடை பிடிக்கணும்னு சொன்னான் அந்த இளவரசர்

மனம் திருந்தின இளவரசியை கல்யாணம் செஞ்சு ரொம்ப சந்தோசமா வாழ்ந்தார் அந்த தவளை இளவரசர்

Exit mobile version