Site icon தமிழ் குழந்தை கதைகள்

The other side of the wall moral story – Tamil Short Stories

The other side of the wall moral story - Tamil Short Stories

The other side of the wall moral story – Tamil Short Stories :- ஒரு ஊருல ஒரு அழகான பாப்பா இருந்துச்சு,அந்த பாப்பாவுக்கு தோட்ட வேலை செய்றதுன்னா ரொம்ப இஷ்டம்

அவளே குழிதோண்டி புது புது செடி வளர்க்கறதுல அவளுக்கு ரொம்ப ஆர்வம் இருந்துச்சு ,அந்த செடியில் பூக்குற பூக்கள அவளுக்கு ரொம்ப பிடிக்கும்

தன்னோட தோட்டத்துல மஞ்சள் பூ இல்லாததால ஒருநாள் அவ சந்தைக்கு போயி புது செடிக்கு விதைகள் வாங்குனா

தன்னோட தோட்டத்துல அவளே குழி தோண்டி அந்த விதைகளை விதைச்ச அந்த பாப்பா ,தினமும் அந்த செடிக்கு தண்ணி ஊத்துனா

வேகமா வளர ஆரம்பிச்ச அந்த செடி ரொம்ப நாள் ஆகியும் பூ பூக்கவே இல்ல,ஒருநாள் பொறுமை இழந்த அந்த பாப்பா

அந்த செடியை வெட்டலாம்னு போனா ,அப்பத்தான் அந்த வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டு பாட்டி நீ என்ன பண்றேன்னு கேட்டாங்க

நான் இந்த செடிய வெட்ட போறேன் இனியும் இந்த செடி பூ பூக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லைனு சொன்னா

நீ எங்க வீட்டு பக்கம் வானு சொன்னாங்க அந்த பாட்டி ,உடனே அந்த பக்கம் போனா அந்த பாப்ப்பா

அங்க அந்த செடியோட ஒரு பகுதி ஒரு ஓட்ட வழியா இந்த பக்கம் வந்து அழகா பூத்து இருந்துச்சு

அடடா நம்மோட பார்வைக்கு படாத காரணத்துனால நல்ல ஒரு செடிய அவசரப்பட்டு வெட்ட போணோமேன்னு சொல்லி வருத்தப்பட்டா

கொஞ்ச நாள் கழிச்சி எல்லா பக்கமும் பூ பூத்தது அந்த செடி

குழந்தைகளா எல்லா விஷயத்துலயும் பொறுமையோட இருக்கணும்

Exit mobile version