Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Mischievous Dog – சேட்டைக்கார நாய்

The Mischievous Dog – சேட்டைக்கார நாய் : ஒரு கிராமத்து வீட்டுல ரெண்டு நாய் குட்டிங்க இருந்துச்சுங்க

அதுல ஒரு நாள் ரொம்ப சேட்ட பண்ணிகிட்டே இருந்துச்சு ,வீட்டுக்கு வர்றவங்கள பார்த்து கொலைக்கிறது

தெருவுல போறவங்கள கடிக்க போறதுன்னு சேட்டை பண்ணிகிட்டே இருந்துச்சு

அத பார்த்த எல்லாரும் அந்த வீட்டோட எஜமானர் கிட்ட முறையிட்டாங்க

உடனே ஒரு பெரிய சங்கிலிய எடுத்து அந்த சேட்டைக்கார நாயோட கழுத்துல கட்டி ஒரு மரத்துல கட்டி வச்சிட்டாரு

தன்னோட கழுத்துக்கு பெரிய சங்கிலி வந்ததுல அந்த முட்டாள் நாய்க்கு ரொம்ப பெருமை அத அங்குட்டும் இங்குட்டும் ஆட்டிக்கிட்டே இருந்துச்சு

அந்த சத்தம் கேட்டு ரொம்ப கோபமான இன்னொரு நாய் அந்த முட்டாள் நாய்கிட்ட வந்து கொஞ்சம் அந்த சங்கிலிய ஆடுறத நிறுத்து

உன்னோட இருப்ப காட்டுறதுக்கு நீ செய்யிற சேட்டை எல்லாம் உனக்கு கேட்ட பேருதான் வாங்கி தரும் ,அது எப்பவும் உனக்கு புகழை தராதுனு சொல்லுச்சு

அத கேட்ட அந்த முட்டாள் நாய்க்கு அப்பத்தான் புரிஞ்சது தான் செய்யுறது எவ்வளவு முட்டாள் தனம்னு

நீதி : தம்பட்டம் அடிப்பது எப்பொதும் புகழை தராது

Exit mobile version