Site icon தமிழ் குழந்தை கதைகள்

The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும்

The horse and the snail moral story

The horse and the snail moral story

The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும் :- ஒரு நாள் காட்டு பகுதியில ஒரு குதிரை நடந்து போய்கிட்டு இருந்துச்சு

அப்ப அந்த பாதைல ஒரு நத்தை ஊர்ந்து போய்கிட்டு இருக்குறத பாத்துச்சு

திமிர்பிடிச்ச அந்த குதிரை “ஏய் நத்தையாரே ஏன் இப்படி மெதுவா நடக்குறீங்க ,என்ன மாதிரி வேகமா நடங்கன்னு சொல்லுச்சு “

குதிரையோட திமிர் பேச்ச கேட்ட அந்த நத்தை இது என்னோட இயல்பு ,நீ உன்னோட வேலைய பாருன்னு சொல்லிட்டு மெதுவா நடக்க ஆரம்பிச்சுச்சு.

நத்தைய பாத்து தொடர்ந்து கேலி செஞ்சுக்கிட்டே இருந்துச்சு அந்த குதிரை ,கோபமான அந்த நத்தை திமிர் பிடிச்ச குதிரைக்கு பாடம் புகட்டணும்னு நினச்சுச்சு உடனே, நீ அவ்வளவு பெரிய திறமைசாலினா என்கூட போட்டிக்கு வர்றியான்னு கேட்டுச்சு

நான் எவ்வளவு வேகமா ஓடுவேன் தெரியுமா ,மெதுவா நடக்குற உன்னால என்ன ஜெயிக்க முடிஞ்சா ஜெயிச்சுக்கோ நாளைக்கு காலைல இதே இடத்துல போட்டி வச்சுக்கலாம்னு அந்த குதிரை சொல்லுச்சு

தன்னோட நண்பர்கள் கிட்ட வந்த அந்த நத்தை நடந்த விஷயத்தை சொல்லுச்சு ,நான்பர்களே நீங்க எனக்கு உதவி செஞ்சீங்கன்னா அந்த திமிர்பிடித்த குதிரைக்கு ஒரு பாடம் புகட்டலாம்னு சொல்லி ,தன்னோட திட்டத்த சொல்லுச்சு

அந்த திட்டத்த கேட்ட எல்லா நத்தைகளும் உதவுறதுக்கு ஒத்துக்கிடுச்சுங்க

மறுநாள் காலைல குதிர வர்றதுக்கு முன்னாடியே மைதானத்துக்கு வந்த நத்தைகள் எல்லாம் ஓடுற பாதை எல்லாத்துலயும் ஒவ்வொரு நத்தையா ஒளிஞ்சு கிடுச்சுங்க

குதிரை வந்ததும் போட்டி ஆரம்பமாச்சு ,

பலசாலியான அந்த குதிரை வேகமா ஓடி ஆரம்பிச்சுச்சு,

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா இருந்த புதர்ல ஒளிஞ்சுக்கிட்டு இருந்த இன்னொரு நத்தை ஓடுற பாதைக்கு வந்துச்சு

இது தான் தன்னோட போட்டி போடுற நத்தைனு குதிரைக்கு நம்ப வைக்க ஓடுற மாதிரி நடிச்சுச்சு ,அடடா இது என்ன நான் இவ்வளவு வேகமா ஓடி வந்தும் இந்த நத்தை எனக்கு முன்னாடி ஓடிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சுட்டு தொடர்ந்து ஓட ஆரம்பிச்சது அந்த குதிரை

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா இன்னொரு நத்தை மரத்துக்கு பின்னாடி இருந்து ஓடுற பாதைக்கு வந்து ஓட ஆரம்பிச்சது ,இத பாத்த குதிரைக்கு குழப்பமா இருந்தாலும் தான் தோத்துக்கிட்டு இருக்கோம்ன்ற நினைப்பு வந்துச்சு ,உடனே வேகமா ஓட ஆரம்பிச்சுச்சு

கடைசியா ஒரு நத்தை பாறைக்கு நடுவில இருந்து வந்து போட்டி முடியிற இடத்துக்கு வந்துச்சு ,

குதிரை அந்த எல்லை கொட்ட தாண்டுறதுக்கு முன்னாடி அந்த நத்தை எல்லை கொட்ட தாண்டிடுச்சு

இது எல்லாத்தையும் உண்மைன்னு நம்புனா அந்த குதிரை ,நத்தை தன்ன தோக்கடிச்சுடுச்சு நம்புச்சு,தன்னோட அறிவில்லாத திமிர்பிடிச்ச குணத்தால நத்தைகிட்ட போட்டி போட்டு தோத்துட்டமேன்னு நினச்சு வறுத்த பட்டுச்சு

உடனே அந்த நத்தைகிட்ட மன்னிப்பு கேட்டுச்சு

Moral:- நீதி :- புத்திமான் பலவான்

Exit mobile version