Site icon தமிழ் குழந்தை கதைகள்

The fox and the goat short story With Moral – நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை

The fox and the goat short story With Moral – நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை :- ஒரு நாள் ஒரு நரி பாலைவனத்துக்கு போச்சு ,அங்க ரொம்ப வெயில் அடிச்சதால அந்த நரி ரொம்ப சோர்வகிடுச்சு

The fox and the goat short story With Moral - நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை

ரொம்ப தாகம் எடுத்த அந்த நரி எதாவது தண்ணி தர்ற கிணறு , குளம் இருக்கானு பாத்துகிட்டே போச்சு

The Fox and the Goat - Aesop's Fables for Kids | Moral Stories for Children
The fox and the goat short story With Moral - நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை 1

அப்பத்தான் அங்க ஒரு கிணறு இருக்குறத பாத்துச்சு,உடனே ரொம்ப சந்தோஷமான அந்த நரி அந்த கிணத்துமேல ஏறி தண்ணி இருக்கான்னு பாத்துச்சு

The fox and the goat short story With Moral - நரியிடம் ஏமாந்த ஆடு சிறுகதை 2

அப்ப திடீர்னு கால் வழுக்கி தண்ணிக்குள்ள விழுந்துச்சு அந்த நரி ,எவ்வளவு முயற்சி செஞ்சும் அதனால வெளிய வர முடியல

காப்பாத்துங்க ,காப்பாத்துங்கனு கத்திகிட்டே இருந்துச்சு அந்த நரி ,அந்த பக்கம் யாருமே இல்லதுனால ரொம்ப நேரம் அந்த நரி கத்திகிட்டே இருந்துச்சு

அப்பத்தான் ஒரு ஆடு அந்த பக்கமா வந்துச்சு ,கிணத்துக்குள்ள இருந்து சத்தம் வராத கேட்ட அந்த ஆடு மெதுவா எட்டி பாத்துச்சு

அடடா நரியாரே கிணத்துக்குள்ள என்ன பன்றிங்கன்னு கேட்டுச்சு

அப்பத்தான் நரிக்கு ஒரு யோசனை வந்துச்சு ,நம்மள யாரும் மேல இருந்து காப்பாத்த முடியாது ,யாராவது உள்ள குதிச்சுதான் காப்பாத்த முடியும்

ஆனா தன்னோட உயிர பணயம் வச்சு யாரும் தன்ன காப்பாத்த கிணத்துக்குள்ள குதிக்க மாட்டாங்க அப்படிங்கிற உண்மையும் புரிஞ்சுச்சு

நமக்குன்னு கிடைச்ச இந்த ஆட்ட ஏமாத்துறத தவிர வேற வழி இல்லைனு முடிவு பண்ணுன அந்த நரி ,ஆடு கிட்ட சொல்லுச்சு இங்க நிறைய நல்ல தண்ணி இருக்கு ரொம்ப குளிர்ச்சியவும் இருக்கு அதான் ரொம்ப சந்தோஷத்துல கத்திடேன்னு சொல்லுச்சு

அவ்வளவு நல்ல தண்ணியா இருக்குன்னு கேட்டுச்சு அந்த ஆடு ,ஆமாம் ஆடாரே நீங்க வேணும்னா உள்ள வந்து பாருங்கன்னு சொல்லுச்சு

முட்டாளான அந்த ஆடு யோசிக்காம உள்ள குதிச்சது ,உடனே அந்த ஆடு அந்த தண்ணிய குடிச்சு ரொம்ப சந்தோசப்பட்டுச்சு

நரியாரே நீங்க சொன்ன மாதிரி இது ரொம்ப சுவையான நீரை இருக்குன்னு சொல்லுச்சு ,ஆமா இப்ப நாம எப்படி வெளிய போகப்போறோம்பு கேட்டுச்சு

அதுக்கு அந்த நரி நாந்தான் இருக்கேன்ல நீ என்மேல ஏறி வெளிய போயிடுனு சொல்லுச்சு ஆடும் அதுக்கு சரின்னு சொல்லுச்சு ,

ஆனா முதல்ல நான் உன்மேலே ஏறி வெளிய போறேன் அடுத்து நீ என்மேல ஏறி வெளிய வான்னு சொல்லுச்சு

நரியோட பேச்சுல இருக்குற சூத அறியாத அந்த முட்டாள் ஆடும் நரி வெளிய போக குனிஞ்சு நின்னுச்சு ,உடனே அந்த நரி அந்த ஆடு மேல ஏறி வெளிய போயிடுச்சு

நரியாரே இப்ப என்ன வெளிய எடுங்கன்னு சொல்லுச்சு ,நான் உள்ள இல்லாதப்ப என்னால எப்படி உனக்கு குனிய முடியும் முட்டாள் ஆடேன்னு சொல்லிட்டு ஓடிப்போயிடுச்சு அந்த நரி

நரியால ஏமாத்த பட்ட அந்த ஆடு அடடா அந்த நரி சொன்னத அப்படியே நம்பி இப்படி ஏமாந்துட்டமேன்னு சொல்லி வறுத்த பட்டு அழுத்துச்சு அந்த ஆடு

குழந்தைகளா யார் என்ன சொன்னாலும் அந்த வார்த்தைய நல்லா புரிஞ்சுகிட்டு அதுல இருக்குற உண்மைய தெளிவா தெரிஞ்சுக்கிட்டு அடுத்த காரியத்த செய்யணும் இல்லைனா இந்த ஆடு மாதிரி கஷ்டம்தான் கிடைக்கும்

Exit mobile version