Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Bed’s Pleasure -பட்டு படுக்கை -அக்பர் பீர்பால் கதை

The Bed’s Pleasure -பட்டு படுக்கை -அக்பர் பீர்பால் கதை:-ஒருநாள் அக்பரோட அரண்மனைல வேல செஞ்சுகிட்டு இருந்த ஒரு வேலைக்காரரு ,ராஜாவோட படுக்கைய சுத்தம் செஞ்சுகிட்டு இருந்தாரு

அப்ப ஒரு யோசனை வந்துச்சு ,அரசரோட படுக்கை எவ்வளவு மென்மையா இருக்கு ,இது படுத்தா எவ்வளவு சுகமா இருக்கும்னு தோணுச்சு

உடனே ஒருதடவ படுக்கைல படுத்தாரு ,உடனே அவருக்கு அடடா இது தப்புனு தோணுச்சு உடனே எந்திரிச்சிட்டாரு

இத அங்க இருந்த காவலாளி பாத்துட்டான் ,அவனுக்கு இந்த வேலைக்காரன பாத்தாலே பிடிக்காது

அதனால அரசர் வைத்ததும் இந்த விஷயத்தை சொல்லிட்டான் ,உடனே கோபமான அக்பர் நாளைக்கு இவனுக்கு 25 சவுக்கடி கொடுங்கன்னு சொன்னாரு

உடனே ரொம்ப வருத்தப்பட்ட அந்த வேலைக்காரரு பீர்பால் கிட்ட போயி நடந்ததை சொன்னாரு

உடனே பீர்பால் ஒரு யோசனை சொன்னாரு ,அத கேட்டுட்டு வெளியபோன அந்த வேலைக்காரரு

ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறமா சத்தம் போட்டு கத்துனாரு

இத கேட்ட எல்லாரும் ஓடிவந்தாங்க ,அரசரும் பீர்பாலும் அங்க வந்தாங்க

பீர்பால் கேட்டாரு எதுக்கு இப்படி கத்துறீங்கன்னு

அந்த வேலைக்காரர் சொன்னாரு ஐயா நான் ஒரு கனவு கண்டேன் , அதுல நான் செத்து எமலோகத்துக்கு போறமாரி கனவு கண்டேன்

அதுல என்னோட பாவ செயல் எல்லாத்தயும் பட்டியல் போட்டாங்க

நான் அரசரோட படுக்கையில படுத்ததயும் தப்புனு சொன்னாங்க.

பட்டு புளுக்கள வச்சு செஞ்ச அரசரோட படுக்க ரொம்ப ஆபத்தானது ,இதுல 10 வினாடி படுத்த எனக்கு இந்த ஜென்மத்துலயே தண்டனை கெடச்சுடுச்சு ,அதனால என்ன அப்படியே சொர்கத்துக்கு அனுப்பிச்சிட்டாங்க

ஆனா இதுல எப்பவும் படுக்கிற அரசருக்கு மேலோகத்து எத்தனை அடி கொடுத்தாங்க தெரியுமான்னு கேட்டாரு

இதே கேட்ட அரசருக்கு இது பீர்பாலோட தந்திரம்னு புரிஞ்சி போச்சு,உடனே தன்னோட தண்டனைய ரத்து செஞ்சு அந்த வேலைக்காரன மன்னிச்சிட்டாரு

உடனே அந்த வேலைக்காரரு தன்னோட மதி நுட்பத்தால தன்ன காப்பாத்துன பீர்பாலுக்கு நன்றி சொன்னாரு

Exit mobile version