Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Bat The Beasts And The Bird Story in Tamil- வௌவால் கதை

The Bat The Beasts And The Bird Story in Tamil- வௌவால் கதை:- ஒரு காலத்துல ஒரு பெரிய காடு இருந்துச்சு அந்த காட்டுக்குள்ள நிறைய மிருகங்களும் நிறைய பறவைகளும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க .

 அந்தக் காட்டுல இருந்த மிருகங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து கிட்டு ரொம்ப அட்டகாசம்  செஞ்சுகிட்டு இருந்துச்சுங்க

 இதை பார்த்த பறவைகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க, வர வர இந்த மிருகங்களோட அட்டகாசம் தாங்க முடியல எப்ப பார்த்தாலும் நம்மள துரத்துரதும் நம்மள பிடிச்சு திங்கிறதுமா இருக்குதுங்க

இதுக்கு ஒரு முடிவு கட்டணும் அதனால நம்ம எல்லாரும் சேர்ந்து மிருகங்களுக்கு எதிராக ஒரு சண்டை போடுவோம் அப்படின்னு முடிவு பண்ணுச்சுங்க .

உடனே ஒவ்வொரு பறவை கூட்டத்தோட தலைவர்களும் ஒண்ணா சேர்ந்து தங்கள் பலத்தை எப்படி அதிகப்படுத்துறதுன்னு பேச ஆரம்பிச்சுச்சுங்க

அப்ப கிளிகளோட தலைவன் சொல்லுச்சு ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் நல்ல வீரர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சண்ட போட்டா நம்ம நம்ம ஈஸியா இந்த மிருகங்களை ஜெயிச்சிடலாம்னு சொல்லுச்சு

உடனே ஒவ்வொரு பறவை கூட்டத்தோட தலைவனும்  தங்களோட முடிவ சொல்லுச்சுங்க

அப்ப அங்க வந்த வௌவால் கூட்டத்தோட  தலைவனைப் பார்த்து அந்த பறவைகள் கேட்டுச்சு நாங்க சண்டை போட போறோம் நீங்களும் உங்க கூட்டத்தாரும் எங்களுக்குத் துணையாக வாங்க அப்படின்னு கேட்டுச்சுங்க

அதைக் கேட்ட வௌவால் கூட்டத் தலைவன் நாங்க பாதி பறவை பாதி மிருகம் அதனால நாங்க உங்க கூட சேர முடியாது அப்படின்னு சொல்லிட்டு பறந்து போயிருச்சு

அதுக்கப்புறமா எல்லா பறவைகளும் சேர்ந்து மிருகங்களோடு சண்டை போட்டுச்சுங்க பறவைகள் பறந்து பறந்து கொத்த மிருகங்கள் கூட்டம் தோத்துப்போச்சு

அதுக்கப்புறமா மிருகங்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சிங்கம் இந்த காட்டிலேயே பலசாலியான நம்ம கூட்டம் ஏன் இப்படி தோத்தோம் தெரியுமா நம்ம எல்லாரும் ஒற்றுமையாக சேர்ந்து சண்ட போடல

அதனால அதனால ஒவ்வொரு மிருகத்தோட தலைவனும் தங்களோட கூட்டத்தோட வந்து அடுத்த சண்டையில பெரும் கூட்டமா போயி அந்த பறவைகளை அடிச்சு வரட்டும் அப்படின்னு முடிவு பண்ணுச்சுங்க

உடனே   ஒவ்வொரு மிருகத்தோட தலைவனும் இதுக்கு ஒத்துகிட்டாங்க ,அப்ப அங்கே வந்த வௌவால் கிட்ட இந்த விஷயத்தை பத்தி சொன்னாங்க

அதுக்கு வௌவால் சொல்லுச்சு நான் பாதி பறவை அதனால நான் உங்க கூட சேர மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு பறந்து போயிடுச்சு

சண்டை போடுற நாள் வந்துச்சு அப்பத்தான் மிருகங்களும் பறவைகளும் நாம எதுக்கு வீணா சண்டை போடணும் நம்ம ரெண்டு சமாதானமா போயிட்டா ரெண்டு பேருக்கும் நல்லது அப்படின்னு முடிவு பண்ணிட்டு

ரெண்டு பேரும் கைகுலுக்கி நண்பர்களா மாறிடுச்சுங்க உடனே இந்த விஷயம் காடு முழுவதும் பரவ எல்லாரும் சந்தோசமா வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாட ஆரம்பிச்சாங்க

அப்ப பறவைகளுடன் சேர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்துச்சு வௌவால்

நீ தான் எங்க கூட சேர மாட்டேன்னு சொல்லிட்ட இல்ல நீ எதுக்கு வரேன்னு துரத்திவிட்டுடுசுங்க

உடனே மிருகங்கள் பக்கம் போன அந்த வௌவால் நீதான் பறவைனு சொல்லிட்டு எங்க கூட சேர மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்ட

நீ எங்க மூட சேராத அப்படின்னு துரத்திவிட்டுடுசுங்க

ரெண்டு பக்கமும் சேராம தனிமையில் இருந்த அந்த வௌவால் கூட்டம் காலம் முழுசும் தனிமையாக இருக்க ஆரம்பிச்சுச்சு

அதனாலதான் வௌவால் மட்டும் பறவைகளோடு சேராம மிருகங்களோடவும் சேராமல் தனியாக காட்டுக்குள்ள தொங்கிக்கிட்டு இருக்கு குழந்தைகளா உங்கள நம்பி யாராவது கூப்பிட்டாங்க நா அவங்கள மதிச்சு நடந்துக்கணும்

Exit mobile version