Site icon தமிழ் குழந்தை கதைகள்

TAMIL STORIES FOR KIDS விறகு வெட்டுபவரும் கோடாரி தந்த மரமும்

TAMIL STORIES FOR KIDS

TAMIL STORIES FOR KIDS விறகு வெட்டுபவரும் கோடாரி தந்த மரமும் :- ஒரு ஊருல ஒரு விறகு வெட்டுறவர் இருந்தாரு

ஒருநாள் அவரு காட்டுக்கு விறகு வெட்ட போனாரு ,அப்ப அவரோட கோடாரியோட கைபிடி ஒடஞ்சு போச்சு ,

உடனே அவருக்கு ரொம்ப அழுகையா வந்துச்சு.இனிமே நான் எப்படி வாழுவேன் , என்னோட கோடரி இல்லாம என்னால சம்பாதிக்க முடியாதேன்னு வறுத்த பட்டாரு

உடனே அங்கே இருந்த மரம் சொல்லுச்சு உங்களுக்கு வேணும்னா என்னோட கிளைகள்ல இருந்து ஒரு பாகத்த வெட்டி எடுத்துக்கோங்க அதுல நீங்க கோடரிக்கு கைப்பிடி செஞ்சுக்கலாம்னு சொல்லுச்சு

உடனே அந்த விறகு வெட்டி அந்த மரத்து மேல ஏறி ஒரு கிளையை வெட்டுனாரு

அந்த கிளைய வச்சு தன்னோட கோடாரிக்கு கைப்பிடி செஞ்சாரு ,மறுநாள் எல்லா மரத்தையும் வெட்ட ஆரம்பிச்சாரு

அப்பதான் அந்த மரத்துக்கு தெரிஞ்சது நாம் வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கணும்

யாரு என்ன செய்ய போறாங்கன்ற விஷயம் தெரியாம அடுத்தவங்களுக்கு உதவ போயி இப்ப நமக்கே ஆபத்து வந்துடுச்சுன்னு சொல்லி வறுத்த பட்டுச்சு

தனக்கு சம்பந்தமே இல்லாத விசயத்துல தலையிட்ட அந்த மரமும் அந்த விறகு வெட்டியால வெட்டப்பட்டு கீழ விழுந்துச்சு

குழந்தைகளா இதுமாதிரிதான் எப்பவும் யோசிக்காம அடுத்தவங்களுக்கு உதவி செய்ய கூடாது , நல்லா யோசிச்சு நல்ல உதவிகள செய்யவும் தயங்க கூடாது

Exit mobile version