Site icon தமிழ் குழந்தை கதைகள்

Tale of Greedy Gloria – பேராசை இளவரசி

Tale of Greedy Gloria – பேராசை இளவரசி :- ஒரு நாட்டுல ஒரு அரசர் இருந்தாரு ,அவருக்கு ஒரு அழகான பொண்ணு இருந்தா

அவ ரொம்ப பேராசை பிடிச்சவளா இருந்தா ,எந்த ஒரு பொருளா இருந்தாலும் அதைவிட பெருசா நல்லதா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி பொலம்பிகிட்டே இருப்பா

ஒருநாள் அவுங்க அம்மா கிட்ட எனக்கு நல்ல உடை இல்லை ,அழகான நகைகள் இல்லை ,எனக்கு உதவி செய்ய நல்ல வேலைகாரங்க இல்லனு சொல்லி பொலம்புனா

இருக்குறத வச்சு சந்தோசப்படணும்னு அவுங்க அம்மா சொன்னாலும் அவ அத கேக்காம பொலம்பிகிட்டே இருந்தா

தனக்கு இன்னும் நிறய வேணும்னு சாமிய நினச்சு வேண்டிகிட்டா அந்த பேராசை பிடிச்ச இளவரசி

அப்ப ரெண்டு குட்டி தேவதைகள் வந்து நீ வேண்டுவது எல்லாம் உனக்கு போதும் போதும்னு கிடைக்கும்னு வரம் கொடுத்தாங்க

அடுத்த நிமிஷம் அவளோட அறை முழுசும் புது துணிகள் ,புது நகைகள் ,அலங்கார பொருட்கள்னு நிறைஞ்சு இருந்துச்சு

அவளுக்கு உதவி செய்ய நிறய வேலை ஆட்கள் வேற இருந்தாங்க ,ஒரு வேலைக்கார பொண்ணு அவளுக்கு காலனிய மாட்டி விட்டா

இன்னொரு வேலைக்கார பொண்ணு அவளுக்கு புது துணிகளை மாட்டிவிட்டா

அவளோட வீடு முழுசும் அவளுக்கு புடிச்ச பொருட்கள் இருந்தாலும் , அவளுக்கு வேணும்னு நினைச்சது எல்லாம் இருந்துச்சு

ஆனா இது எல்லாம் கிடைச்சும் அந்த பேராசை பிடிச்ச இளவரசிக்கு சந்தோஷத்துக்கு பதிலா சோகம்தான் வந்துச்சு

அடடா நம்ம கிட்ட இருந்த பொருட்கள வச்சு சந்தோசமா இருந்துருக்கலாமே ,இப்படி வேண்டாத வேலை செஞ்சு இப்படி மாட்டிக்கிட்டமேன்னு வருத்தப்பட்டா

நிறய வேலைகாரங்க இருக்குறதால அவளுக்கு இருந்த சுதந்திரம் இல்லாம போச்சு ,நிம்மதியா தூங்க கூட முடியல

அந்த பேராசை இளவரசிக்கு அழுகை அழுகையா வந்துச்சு ,உடனே தன்னோட அம்மாகிட்ட போயி தான் செஞ்ச தவறை சொல்லி அழுதா

உடனே திரும்பவும் அங்க வந்த ரெண்டு குட்டி தேவதைகளும் வந்தாங்க,அவுங்க மறுபடியும் ஒரு மந்திரத்தை சொல்லி அந்த பேராசை இளவரசி கிட்ட கொடுத்த எல்லாத்தையும் திரும்ப எடுத்துகிட்டாங்க

தன்கிட்ட இருக்குறதோட அருமையும் அமைதியும் அப்பத்தான் அந்த இளவரசிக்கு புரிஞ்சது , அதுக்கு அப்புறமா எதுக்கெடுத்தாலும் குறை சொல்லுற தன்னோட தவறை திருத்திக்கிட்டு ரொம்ப நல்ல பிள்ளையா வாழ ஆரம்பிச்சா

Exit mobile version