Site icon தமிழ் குழந்தை கதைகள்

Ramu Somu Story in Tamil (Karadi Story) Wild Bear Moral Story

Ramu Somu Story in Tamil (Karadi Story) Wild Bear Moral Story :- ராமுவும் சோமுவும் சிறந்த நண்பர்கள் ,அவுங்க ஒருநாள் காட்டு வழியா பக்கத்து ஊருக்கு போய்கிட்டு இருந்தாங்க

Ramu Somu Story in Tamil (Karadi Story) Wild Bear Moral Story :- ராமுவும் சோமுவும் சிறந்த நண்பர்கள் ,அவுங்க ஒருநாள் காட்டு வழியா பக்கத்து ஊருக்கு போய்கிட்டு இருந்தாங்க

அப்படி போறப்ப ஒரு அடர்ந்த புதர்ல இருந்து ஏதோ சத்தம் வந்தது

ரெண்டு நண்பர்களும் ரொம்ப பயந்து போனாங்க

அப்பத்தான் ஒரு பெரிய கரடி அவுங்கள நோக்கி வந்துகிட்டு இருந்துச்சு

ராமு உடனே வேகமா ஓடி போயி ஒரு மரத்துல எறிகிட்டான் ,

அவனுக்கு தன்னோட வந்த நண்பன விட தன்னோட உயிர் தான் முக்கியமா இருந்துச்சு அதனாலதான் சோமுவ அந்த கரடிகிட்டயே விட்டுட்டு ஓடிட்டான்

இத பாத்த சோமுவுக்கு அதிர்ச்சியா இருந்துச்சு ,எனக்கு மரம் ஏற தெரியாதேன்னு இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சான்

அப்பத்தான் அவுங்க தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு கரடி செத்துப்போன எந்த பொருளையும் சீண்டாதுன்னு

உடனே சோமு மெதுவா கீழ படுத்துகிட்டு செத்தது மாதிரி நடிச்சான்

கிட்ட வந்த அந்த கரடி மெதுவா அவனை மோந்து பாத்துச்சு

எந்த அசைவும் இல்லாம இருந்த சோமுவ விட்டுட்டு அது பாட்டுக்கு போயிடுச்சு

இந்த காட்சிய மரத்துமேல இருந்து பாத்த ராமுவுக்கு கரடி என்னமோ சோமு காதுல சொன்ன மாதிரி இருந்துச்சு

மெதுவா கீழ வந்த ராமு சோமுகிட்ட அந்த கரடி உன் காதுல என்ன சொல்லுச்சுன்னு கேட்டான்

அப்பத்தான் சோமு சொன்னான் ஆபத்தான நிலைல உன்ன விட்டுட்டு போன நண்பன் கூட எப்போதும் சேராதனு சொல்லுச்சுன்னு சொல்லிட்டு தனியா நடக்க ஆரம்பிச்சான்

தன்னோட சுயநலத்த நினைச்சு வருத்த பட்டான் ராமு

Exit mobile version