Site icon தமிழ் குழந்தை கதைகள்

Princess Aurora Tamil Kids Story – இளவரசி அரோரா

Princess Aurora Tamil Kids Story – இளவரசி அரோரா :- ஒரு நாட்டுல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு ஒரு அழகன இளவரசி இருந்தா

ரொம்ப நல்ல பொன்னான அவ ரொம்ப இறக்க குணம் கொண்டவலா இருந்தா , எல்லா மிருகங்களையும் பறவைகளையும் நல்ல படியா பாத்துக்கிட்டா

ஒருநாள் தோட்டத்துல ஒரு குட்டி குருவி அடிபட்டு கிடக்கிறத பார்த்தா , அத பார்த்த இளவரசி அரோராவுக்கு ரொம்ப கவலையா போச்சு

அதனால தன்னோட அரண்மனைக்கு அத எடுத்துட்டு போயி வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சா

தன்னோட பாட்டி கிட்ட கொண்டுபோய் அந்த குருவிய கொடுத்து வைத்தியம் செய்ய சொன்னா ,அவுங்களும் நிறய மூலிகைகள போட்டு மருந்து தயார்செஞ்சு அந்த குருவியை காப்பாத்துனாங்க

ஆனா அந்த குருவிக்கு ரொம்ப அடிபட்டதால அது பறக்கவே இல்ல

ரொம்ப நாள்கழிச்சு அந்த குருவிக்கு உடம்பு சரியாச்சு , உடனே அரண்மனை மாடிக்கு வந்த இளவரசி அந்த குருவிய பறக்க சொன்னா

ரொம்பநாள் பறக்காம இருந்த அந்த குருவி கொஞ்சம் கொஞ்சமா கஷ்ட பட்டு பறந்து போச்சு

அந்த குருவி பறந்து போறது பார்த்துகிட்டு இருந்தப்ப டக்குனு அவ முன்னாடி ஒரு மந்திர தேவதை வந்துச்சு, என்னுடைய படைப்பான அந்த குருவிய காப்பாத்துனதுக்கு உனக்கு என்ன வரம் வேணும்னு கேட்டுச்சு அந்த தேவதை

அதுக்கு இளவரசி அரோரா சொன்ன ,நான் இதே மாதிரி நிறய மிருகங்களையும் பறவைகளையும் காப்பாத்தணும் ,அதனால் யாருக்கெல்லாம் என்னோட உதவி தேவையோ அவுங்க இடம் எனக்கு தெரியணும்னு கேட்டா

அதுக்கு அந்த மந்திர தேவதை சொல்லுச்சு ,உனக்கு நான் வரம் கொடுக்க நினச்சா நீ மத்தவங்களுக்கு வரம் கேக்குற ,உன்னோட நல்ல குணம் எனக்கு புடிச்சிருக்கு ,உனக்கு நீ கேட்ட வரத்தை கொடுக்குறேன் ,அதே நேரத்துல நீ தொட்டதும் அந்த பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உடனே வைத்தியம் இல்லாமலேயே உடம்பு சரியாகிடும்னு இன்னொரு வரத்தையும் சேர்த்தே கொடுத்துச்சு அந்த தேவதை

புது சக்தி கிடைச்ச இளவரசி அரோரா அந்த நாட்டுல இருக்குற அடி பட்ட ,உடம்புக்கு சரியில்லாத மிருகங்களையும் பறவைகளையும் அவளுக்கு கிடைச்ச புது சக்தியை வச்சு கண்டுபிடிச்சி அதுங்கள தேடி போனா

அந்த மிருகங்களை தன்னோட சக்தியால குணப்படுத்தி அதுல சந்தோசப்பட்டா அரோரா ,

அவளோட இந்த நடவடிக்கைகளை பார்த்த அரசர் ,மத்தவங்களுக்கு உதவுரவங்க தான் இந்த நாட்டை ஆளும் முதல் தகுதி படைச்சவங்களா இருக்காங்க , அப்படி பாக்கும்போது மற்ற உயிரினங்கள் மேல அன்பு செலுத்துற உனக்கு இந்த அரசையே பரிசா தரேன் ,நீ தான் இனிமே இந்த நாட்டோட ராணினு சொன்னாரு

தன்னுடைய நல்ல குணத்துனால அரசியான அரோரா தொடர்ந்து நல்ல விஷயங்களையே செய்ய ஆரம்பிச்சு உலக புகழ் அடைஞ்சா

Exit mobile version