Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla’s Eggplant Necklace – முல்லாவும் முட்டை கத்திரி காயும்

Mulla’s Eggplant Necklace – முல்லாவும் முட்டை கத்திரி காயும் :- புகழ் வாய்ந்த புத்திசாலியான முல்லா ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவரு ஒருநாள் பக்கத்து நாட்டுக்கு சுற்றுலா போக முடிவு செஞ்சாரு ,உடனே அவரோட அந்த கிராமத்த சேர்ந்தவர்களும் அவரோட சுற்றுலா போனாங்க ,அப்படி போறப்ப நிறைய பக்கத்து ஊரு மக்களும் அவரோட சேர்ந்து பயணம் போனாங்க.

சில நேரம் நடந்தும் ,சில நேரம் வாடகை வாகனங்கள்லயும் அவுங்க பயணம் போனாங்க,பயண செலவுக்கு உணவு செலவுக்கு எல்லாரும் சேர்ந்து ஒரு பெரியவர்கிட்ட மொத்தமா பணம் ,அப்ப ஒரு அப்பா சொன்னாரு குழந்தைகளா என்கூடவே நடந்து வாங்க ,இது வெளியூர் நீங்க தொலஞ்சி போய்ட்டினேன்னா உங்க அடையாளத்தை வச்சு உங்கள கண்டு பிடிக்கிறது கஷ்டம்னு சொன்னாரு

உடனே முல்லா சொன்னாரு அடடா இப்ப நான் தொலைஞ்சு போய்ட்டா எங்கூட வர்றவங்களுக்கே அடையாளம் தெரியாம போய்டுமேனு சொன்னாரு ,உடனே அங்க இருந்த முட்டை கத்திரிக்கா செடிய எடுத்து தன்னோட கழுத்துல போட்டுக்கிட்டாரு

அன்னையில இருந்து எல்லாருக்கும் அடையாளம் சொல்ல முட்ட கத்திரிக்கா முல்லானு விளையாட்டா சொல்ல ஆரம்பிச்சாங்க ,அப்படி ஒருநாள் அவுங்க பயணம் போகும்போது கொஞ்ச நேரம் மரத்தடியில படுத்து ஓய்வெடுத்தாங்க

முல்லாவ முட்டாளாக்க நினைச்சாரு அவரோட பயணம் செஞ்ச ஒருத்தரு ,தன்னோட புத்திசாலித்தனத்தோட நகைச்சுவையா பேசி முல்லா புகளோட இருக்குறது அவருக்கு பொறாமையா இருந்துச்சு,முல்லா கிட்ட வந்த அவரு முல்லா நல்லா தூங்குறத பார்த்ததும் அவரோட கழுத்துல இருந்த முட்டை கத்திரிக்கா செடியை எடுத்து அவரோட கழுத்துல போட்டுக்கிட்டாரு

தூங்கி எழுந்திரிச்சி அத பார்த்த முல்லா கிட்ட அவரு சொன்னாரு இத பார்த்தீங்களா நாந்தான் இனிமே முட்ட கத்திரிக்கா முல்லானு சொன்னாரு ,அவரோட திட்டத்தை புரிஞ்சிக்கிட்டாரு ,ஓஹ் இந்த ஆளு என்ன முட்டாளாக்க பாக்குறாருனு ஒரு நிமிஷம் யோசிச்ச முல்லாவுக்கு ஒரு நல்ல யோசனை வந்துச்சு

உடனே ஐ முட்ட கத்திரிக்கா முல்லா இங்க இருக்காருன்னு சொல்லி அவருக்கு கை கொடுத்தாரு ,இத பார்த்த எல்லாரும் என்ன முல்லா இப்படி சொல்லி தன்னோட தோல்வியா ஏத்துக்கிட்டாரானு யோசிச்சாங்க,

ஆனா அடுத்து முல்லா சொன்னாரு இன்னைல இருந்து முல்லாவோட பயண செலவுக்கும் , உணவு செலவுக்கும் இவரு கிட்ட வாங்கிக்கோங்கன்னு சொன்னாரு ,இத பார்த்த செலவு கணக்கு பாக்குற பெரியவர் நீதான இப்ப முல்லா 100 வெள்ளி காசு செலவு செய்ய கொடுன்னு சொன்னாரு

அடடா இப்படி முல்லாவ முட்டாளாக்க நினைச்சு தான் முட்டாளாகிட்டமேன்னு வறுத்த பட்டாரு ,ஆனா அங்க இருந்த எல்லாரும் சிரிக்கிறாங்கனு அந்த 100 வெள்ளி காச கொடுத்துட்டு திரும்பி பார்க்காம நடந்தாரு

Exit mobile version