Mulla in the Cupboard- பீரோவில் முல்லா :- முல்லாவோட புகழ் உலகம் முழுசும் பேச பட்டதால அவரு பெரிய பணக்காரரா இருப்பாருனு நிறைய பேரு நினைச்சாங்க
ஆனா முல்லா ஒரு சின்ன கிராமத்துல குடிசை வீட்டுல ஒரே ஒரு கழுதையோட, சந்தையில வியாபாரம் பார்த்துதான் வாழ்ந்துகிட்டு வந்தாரு
ஆனா அந்த ஊர் மக்களும் ,பக்கத்து ஊர் மக்களும் அது எப்படி இவ்வளவு புத்திசாலித்தனமா எல்லார் பிரச்னையும் தீர்த்து வைக்குராறு எல்லாரு கிட்டயும் எப்படியும் நிறய காசு வாங்கி வீட்டுக்குள்ள அல்லது வீட்டுக்கு பின்னாடி இருக்குற தோட்டத்துல மறைச்சு வச்சிருப்பாருனு நினைசிச்சாங்க
அப்படித்தான் ஒரு திருட்டு கும்பல் அந்த ஊருக்கு வந்துச்சு ,ஊருக்குள்ள யாருகிட்ட நிறய பணம் புகளோட இருக்காங்கனு நோட்டம் விட்டு கண்டு பிடிக்க நினைச்சாங்க ,அதுக்காக மோர் விக்கிறவன் மாதிரி மாறு வேசத்துல ஊருக்குள்ள வந்த திருடன் ஊருல இருக்கவங்க கிட்ட எல்லாம் பேச்சு கொடுத்தான்
யாரா இருந்தாலும் பேச ஆரம்பிச்ச ஒரு நிமிசத்துல முல்லாவோட பேரா சொல்லுவாங்க ,அவரோட புகழ பத்தி சொல்லுவாங்க ,அவரோட புத்திசாலித்தனத்தை பத்தி பேசுவாங்க ,இத எல்லாம் கேட்டுட்டு காட்டுக்கு போன திருடன் தன்னோட கும்பல் கிட்ட சொன்னான் இந்த ஊருல முல்லா முல்லானு எல்லாரும் சொல்லுறாங்க அவன்தான் நாம் திருடுறதுக்கு உகந்தை ஆள்
அந்த ஆள் ஒரு குடிசை வீட்டுலதான் இருக்கான் ,அவன் வீட்டையும் போய் பார்த்துட்டு வந்துட்டேன் ,அவன் வீட்டுல ஒரு பீரோ மட்டும் இருக்கு ,ஒரு வேல அவன் வீட்டுக்கு பின்னாடி இருக்குற தோட்டத்துல கூட அவன் சம்பாதிச்சத எல்லாம் ஒளிச்சு வச்சிருக்கலாம்னு சொன்னான்
உடனே இன்னொரு திருடன் அப்ப இன்னைக்கே அவன் வீட்டுக்கு திருட போவோம் ,முதல்ல தோட்டத்துல அவன் எதாவது புதைச்சு வச்சிருக்கானான்னு பார்ப்போம் , இல்லாட்டி வீட்டுக்குள்ள போயி அவனை அடிச்சி போட்டுட்டு பீரோக்குள்ள இருக்குறத எல்லாம் திருடிட்டு வந்துடுவோம்னு சொன்னான்
கிராமத்துல இருக்குற எல்லாரும் ,தூங்குனதும் ஊருக்குள்ள வந்த திருட்டு கும்பல் ,நேரா முல்லா இருக்குற குடிசைக்கு வந்தாங்க ,மெதுவா தோட்டத்து பக்கம் வந்த திருட்டு கும்பல் அந்த எதுவும் புதைச்சு வச்சிருக்கானு தேடி பார்த்தாங்க ,அப்பத்தான் தூக்கிகிட்டு இருந்த முல்லா சத்தம் கேட்டு ஜன்னல் வழியா திருடர்கள் வந்திருக்கிறத பார்த்தாரு
அடடா திருடர்கள்னு பதட்ட பட்ட முல்லா நேரா ஓடி போயி பீரோ குள்ள ஒளிஞ்சிகிட்டு கதவ மூடுனாரு ,தோட்டம் முழுசும் தேடி ஒன்னும் கிடைக்காத திருடர்கள் கும்பல் ,முல்லா குடிசைக்குள்ள வந்தாங்க ,அங்க இருந்த பெட்டி பானை எல்லாத்தையும் தேடி பார்த்தாங்க
அவுங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கல ,அப்பத்தான் ஒரு திருடன் அங்க இருந்த பீரோவ பார்த்தான் ,இங்க பாருங்க எவ்வளவு பெரிய பீரோ இத உடைச்சு பாருங்க உள்ள நிறய பணம் இருக்கும்னு சொன்னாங்க ,உடனே ஒரு பெரிய சுத்தல எடுத்து தட்டி அந்த பீரோவ திறந்தான் ஒரு திருடன்
உள்ள முல்லா அசடு வழிய உக்காந்து இருந்தாரு ,அவர பிடிச்சு வெளிய கொண்டுவந்த திருடர்கள் ,ஏன் இப்படி பீரோ குள்ள ஒளிஞ்சு இருக்க எல்லா பணத்தையும் ,நகையையும் பீரோக்குள்லதான் ஒளிச்சு வச்சிருக்கியான்னு கேட்டாங்க
அப்பத்தான் முல்லா பேச ஆரம்பிச்சாரு ,இந்த வீட்டுல ஒரு பைசா கிடையாது ,என்கிட்டே சேமிப்புனு கொஞ்சம் கூட இல்ல ,இத எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னு எனக்கு வெட்கமா இருந்துச்சு ,அதனால் தான் பீரோக்குள்ள ஒளிச்சுகிட்டேன்னு சொன்னாரு
அவரு சொன்ன மாதிரியே அந்த பீரோவ தேடி பார்த்த திருடன் உள்ள ஒரு பைசா கூட இல்லைனு சொன்னான் , பேரு புகழ் இறக்குறவன் எல்லாம் பணக்காரனு நினைச்சது பெரிய தப்புனு தலையில அடிச்சிக்கிட்டு அங்க இருந்து ஓடி போய்ட்டாங்க அந்த திருட்டு கும்பல்
