Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla And His Wife – முல்லாவும் அவரது மனைவியும்

Mulla And His Wife – முல்லாவும் அவரது மனைவியும் :-முல்லாவும் அவரோட மனைவியும் ஏழ்மையான வீட்ல தான் வாழ்ந்தாங்க இருந்தாலும் அவங்க உழைத்த காச வச்சு நல்லபடியா நல்ல சாப்பாடு சாப்பிட்டு அவங்க குடும்பத்தை சந்தோஷமா நடத்துனாங்க

ஒரு நாள் முல்லாவும் அவரோட மனைவியும் சாப்பிட உட்கார்ந்தாங்க அன்னைக்கு முல்லாவோட மனைவி சப்பாத்தி செஞ்சு இருந்தாங்க ரெண்டு பேரும் சாப்பிட ஆரம்பிச்ச உடனே முல்லா கேட்டாரு எனக்கு கொஞ்சம் தேன் ஊத்து அப்படின்னு கேட்டாரு முல்லா

உடனே வோட மனைவி சொன்னாங்க ஆமாமா தேன் ரொம்ப நல்லது இந்தாங்க உடம்புக்கு நல்லது இந்த தேனை சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு 100 வயசு வரைக்கும் ஆயுசு இருக்கு அப்படின்னு சொன்னாங்க அதைக் கேட்டுக்கிட்டே முல்லா ஒரு சப்பாத்தியை தேன் தொட்டுக்கிட்டு நல்லா சுவைச்சு சாப்புட்டாரு

அடுத்ததா எனக்கு கொஞ்சம் சர்க்கரை கொடு நான் இந்த சப்பாத்தி சக்கரை வைத்து சாப்பிட போறேன் அப்படின்னு சொன்னாரு முல்லா

உடனே முல்லாவோட மனைவி சொன்னாங்க இந்தாங்க சர்க்கரை நல்ல சுவையாக இருக்கும் இனிப்பானதை சாப்பிட்டு சந்தோஷமா இருந்தீங்கன்னா தான் உங்கள் ஆயுசு கூடம் அப்படின்னு சொன்னாங்க அதையும் கேட்டுக்கிட்டு முள்ள இந்த சப்பாத்தியா சக்கர வச்சு சாப்பிட்டாரு

அடுத்ததா முல்லாவுக்கு வெண்ண வச்சு சாப்பிடணும்னு ஆசை வந்துச்சு உடனே எனக்கு கொஞ்சம் வெண்ணை கொடு இந்த சப்பாத்திய நான் வெண்ணையை தொட்டுக்கிட்டு சாப்பிட போறேன் அப்படின்னு சொன்னாரு

அப்பத்தான் முல்லாவோட மனைவி சொன்னாங்க வெண்ண ரொம்ப கொழுப்பு சத்து ஜாஸ்தி அத உடம்புக்கு சேத்துக்கிட்டீங்கன்னா உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்கிடாது அப்படின்னு சொன்னாங்க

இது என்ன சக்கரையவே இனிப்பா சாப்பிட்டா நல்லா இருக்குன்னு சொன்ன நீ ஏன் வெண்ணெய் மட்டும் இப்படி சொல்லுற அப்படின்னு கேட்டாரு அப்பதான் முல்லாவோட மனைவி சொன்னாங்க நம்ம வீட்ல என்ன இருக்கோ அதுதாங்க நல்ல பொருள் நம்ம வீட்டுல இன்னைக்கு வெண்ண இல்ல அதனால தான் அப்படி சொன்னேன் அப்படின்னு சொன்னாங்க

கணவன் மனைவிக்குள்ள இல்லை என்கிற விஷயத்தை நாசுக்கா சொல்லி புரிய வச்ச மனைவியை பாராட்டிரு முல்லா ,இருக்குறத வச்சுக்கிட்டு எப்படி வாழ்க்கையில சந்தோசமா வாழலாம்னு நமக்கு சொல்றதுக்காக இந்த கதையை எழுதி இருக்காங்க போல

Exit mobile version